ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இந்த ஆண்டின் மிகச்சிறந்த தமிழ் சினிமா வெற்றியாக சாதனை படைத்துள்ளது. இவ்வளவு பெரிய வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சி தியேட்டர்களில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்பிரைட் கேட்பதை கிண்டல் செய்யும் வகையில் அந்த காட்சி அமைக்கப்பட்டிருந்தது. படம் மெகா ஹிட் அடித்துள்ள நிலையில், இந்த காப்பிரைட் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர் ஜே பாலாஜி இதற்கு விளக்கமளித்தார். படத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் ‘ரத்தமாரே’ பாடலைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டதாகவும், ஆனால் அந்த குறிப்பிட்ட பாடலின் காப்பிரைட் உரிமத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ. 25 லட்சம் கேட்டதாகவும் கூறினார். ஒரு சிறிய காட்சிக்கு அவ்வளவு பெரிய தொகையைச் செலவழிக்க விரும்பாததால், அவர்கள் அந்த முடிவைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக இளையராஜாவின் காப்பிரைட் விவகாரத்தை நகைச்சுவையாக மாற்றியதாக பாலாஜி ஓப்பனாக ஒப்புக்கொண்டார்.
பாலாஜியின் இந்த பேட்டி வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக கலாய்த்து வருகின்றனர். “ஏன் சார், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் உங்களிடம் 25 லட்சம் கேட்டால் கம்முனு காட்சியை மாத்துறீங்க… ஆனா தன் உழைப்புக்கு காப்பிரைட் கேட்கும் ராஜா சாரை மட்டும் படத்துல கிண்டல் செய்றீங்களா? உங்களுக்கு வந்தா ரத்தம், அதுவே ராஜா சார்க்கு வந்தா தக்காளி சட்னியா?” என்று வடிவேலுவின் பாணியில் மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…