ரயிலில் ஒரு குழந்தை.. ஆம்புலன்ஸில் ஒரு குழந்தை.. ஒரே நாளில் நடந்த விசித்திர இரட்டை குழந்தை பிறப்பு.. இணையத்தில் வைரல்..!!

Spread the love

ஒடிசா மாநிலத்தில் ஓடும் ரயில் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய இரண்டு வெவ்வேறு வாகனங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் தனது இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ரூர்கேலா-குனுபூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்த அந்தப் பெண்ணுக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சக பயணிகள் உடனடியாக ‘ரயில் மதத்’ போர்ட்டல் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

ரயில் கட்டக் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பாகவே, சக பயணிகளின் உதவியுடன் ரயிலுக்குள்ளேயே அந்தப் பெண்ணுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ரயில் நிலையம் வந்தடைந்ததும், பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து அந்தப் பெண்ணையும் குழந்தையையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸிற்குள் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டு, இரண்டாவது குழந்தையும் சுகப்பிரசவமாக பிறந்தது.

தற்போது கட்டக் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயும், இரு குழந்தைகளும் முற்றிலும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இக்கட்டான இச்சூழ்நிலையில் சாதுரியமாகச் செயல்பட்டு பிரசவத்திற்கு உதவிய ரயில்வே ஊழியர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் சக பயணிகளுக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

4 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

5 மணத்தியாலங்கள் ago