தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது ராமமூர்த்தி இறந்துவிட ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் உள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக எதிர்பாராத வகையில் ராமமூர்த்தியின் மரணம் வந்துள்ளது. குடும்பத்திற்கு தூணாகவும் பாக்கியலட்சுமிக்கு வரும் பிரச்சனைகளில் துணையாக இருந்து வந்த இவர் இப்போது இல்லை என்பதை சீரியல் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் ரோசரி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், அண்ணா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் இருக்கு வந்து சீரியல் தரப்பினர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர். சீரியலில் என் கதாபாத்திரம் முடியவில்லை. நான் சரி இருக்கட்டும் என்று சொல்லிவிட்டேன். அப்போது அவர்கள் ராமமூர்த்தியின் இறுதி தருணம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
நானும் ஒரு நடிகர் அதனால் அதற்கு தகுந்தது போல சரியாக நடிக்க வேண்டும் என்று காட்சிகளை நடித்து முடித்து இருக்கிறேன். ராமமூர்த்தியின் இறுதி தருணங்களை பார்த்து எங்க வீட்ல எல்லோரும் ரொம்ப ஃபீல் பண்ணுனாங்க. நான் ராமமூர்த்தி கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பது என்னுடைய சாயல் நடிப்பு கிடையாது.
அது என்னுடைய அப்பாவின் கேரக்டர் தான். ராமமூர்த்தி அப்படியே என்னுடைய அப்பாவை தான் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். இனி சீரியலில் ராமமூர்த்தி இல்லாமல் போன பிறகு அடுத்தடுத்து கதை திருப்புங்கள் வரப்போகிறது என்று நடிகர் ரோசரி கூறியுள்ள செய்தி ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…