#image_title
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் ரிலீஸ் ஆகி 100 கோடி ரூபாய் மேல் வசூல் செய்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
அரண்மனை 4:
சுந்தர்.சி இயக்கத்தில் மே மாதம் மூன்றாம் தேதி அரண்மனை 4 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றி படமாக மாறியது.
மகாராஜா:
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை நித்தலன் சுவாமிநாதன் இயக்கினார். இந்த படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. உலக அளவில் 108 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மகாராஜா படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இந்தியன் 2:
உலக நாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை மாதம் 12-ஆம் தேதி ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் உலக அளவில் திரைப்படம் 151 கோடி ரூபாய் வசூல் செய்தது. கமல்ஹாசன் படங்கள் என்றாலே சூப்பர் ஹிட் ஆகும். ஆனால் இந்தியன் 2 படம் ஏமாற்றத்தை தந்தது.
ராயன்:
தனுஷ் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி ராயன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்போது ஓடிபி தளத்திலும் வெற்றி நடை போடுகிறது. ராயன் திரைப்படத்தை தனுஷ் தான் இயக்கியுள்ளார். உலக அளவில் ராயன் திரைப்படம் 158 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஆனது. இந்த படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் இசையும் பிளஸ் பாயிண்ட் அமைந்தது.
தங்கலான்:
விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கினார். தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உலக அளவில் தங்கலான் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கும், சங்கீதாவுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள…
தமிழகத்தில் தவெக ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் மரிய வில்சனுக்கும், புதுச்சேரியில் வசிக்கும் அவரது தம்பி மரிய கிளோத்துக்கம் இடையே நீண்டநாட்களாகச்…
சிங்கப்பூர் உணவகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மனித உறவுகளின் சிக்கலையும் அவசர முடிவுகளின் ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது. சிறுமியின் தலைமீது முதியவர்…
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஐத்தம்புடி கால்வாய் சோகத்தின் சுவடுகள் மறைவதற்குள்ளேயே, பாலக்கோடேரு மண்டலம் வெந்திரா கிராமத்தில் மற்றுமொரு கொடூர…
மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…
அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…