கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கலக்களி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் ஜிகலுர். இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தம்பதியரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியின் நடத்தை மீது பிரவீனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்த மனைவியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரவீன் நேரில் சந்தித்துள்ளார்.
கடந்த காலக் கசப்புகளை மறந்துவிட்டு இனி நாம் சேர்ந்து வாழலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அன்று மாலையே இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற பிரவீன், மனைவியை கட்டையால் தாக்கிவிட்டு பின்னர் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். மனைவியின் உயிர் போராடிக் கொண்டிருந்த அந்த கோரக் காட்சியை தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து அவர் கொடூரமாக ரசித்துள்ளார்.
மட்டுமின்றி, மனைவியின் பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்து, அவர்களின் மகள் உயிருக்குப் போராடும் கொடூரக் காட்சியைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளதுடன், அந்த வீடியோவையும் பலருக்குப் பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், தப்பியோட முயன்ற பிரவீனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால், 73 வயது முதியவர் ஒருவர் உடைந்த காலோடு 150 கிலோமீட்டர் தூரம்…
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி…
வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…
பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…
ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…
சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…