தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கான்கிரீட் வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பலரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு அரசு பல உதவிகளை செய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உணவு மற்றும் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் தவித்து வருவதால் அறந்தாங்கி நிஷா சென்னை மக்களுக்கு உதவ திருச்சியில் இருந்து முன்வந்துள்ளார். ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதற்கு தாம்பரத்தில் ஏற்பாடு செய்துள்ள நிஷா மக்களுக்கு உணவு தருவதற்கு வாகனங்களை வாடகைக்கு தர யாருமே முன்வரவில்லை என்று வருத்தத்துடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
பல இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தங்களால் முடிந்த உதவிகளை சென்னை மக்களுக்காக செய்து உதவுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் யாராவது உதவி என்று கேட்டால் மறுக்காமல் தயவு செய்து செய்யுங்கள் என நிஷா உருக்கமாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி செங்கோட்டையில் கடந்த வாரம் நடந்த கார் வெடி விபத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதனை…
வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குளிர்பான டீலர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கடன் வாங்கியவர் ஜாதியை சொல்லி பொதுவெளியில்…
பிரபல பின்னணிப் பாடகர் மனோ, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 26,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பாஜக உடன்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி என்ற கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு 30…