மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி என்ற கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு 30 வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது மணிகண்டனுக்கு பணியாற்றும் நிறுவனத்தில் 27 வயதுடைய பாரதிராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் அடிக்கடி வெளியில் செல்லும் இருவரும் பணத்திற்கு கணக்குப் பார்த்துக் கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து செலவழித்துள்ளனர்.
மேலும் பாரதிராஜாவும் மணிகண்டனும் பல்வேறு திருமணமான பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். திடீரென்று இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையாக மாறியது. இதன் காரணமாக பாரதிராஜா மணிகண்டன் இடம் அவருக்கு செலவு செய்த பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணிடம் பாரதிராஜா தொடர்பு வைத்துள்ளார்.
இதனை அறிந்த மணிகண்டன் பாரதிராஜாவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பார்க்கும் இடத்தில் எல்லாம் இது குறித்து பேசி அவமானப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா மணிகண்டனை தீர்த்த கட்ட முடிவு செய்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி இரவு மணிகண்டனை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு மணிகண்டன் மற்றும் பாரதிராஜா அவர்களது நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மணிகண்டன் மீண்டும் தன்னுடைய நண்பனிடம் அந்த பெண்ணை குறித்து பேசி தகராறில் ஈடுபட்டதால் பாரதிராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கி கொலை செய்து தலையை துண்டித்துள்ளார்.
பிறகு அவருடைய உடலை பாரதிராஜா மற்றும் அவருடைய நண்பர்களான விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகியோர் மதுரை மாவட்டம் கூட கோவில் அருகே உள்ள கிராமத்தில் உள்ள தரைப்பாலம் அருகே வீசி உள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காணாமல் போன மணிகண்டனின் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாலத்தின் அடியிலிருந்து மீட்டனர்.
ஆனால் தலை கிடைக்காத நிலையில் மணிகண்டனை கொலை செய்த பாரதிராஜா மற்றும் அவருடைய நண்பர்களான விக்னேஸ்வரன் மற்றும் மதன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து தலையை எந்த இடத்தில் போட்டீர்கள் என்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தரைபாலம் அருகே தலையை போட்டு அதன் மீது கல் வைத்துள்ளோம் என்று தெரிவித்தனர். அதேசமயம் மணிகண்டன் உடல் போடப்பட்ட பகுதியில் துர்நாற்றம் வீசியது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அப்பகுதியில் கோழி கழிவு மற்றும் இறந்து போன நாய் ஒன்றை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
திருமண மேடையில் மணமகன் கழுத்தில் மாலை சூட வேண்டிய நேரத்தில், மணமகனைப் பார்த்தவுடன் மணப்பெண் திருமணத்தை நிறுத்தச் சொன்ன அதிர்ச்சி…
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணம் முடிந்த 14-வது நாளிலேயே மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சரியாக நள்ளிரவு 12:07 மணி. நிஷா தனது புதிய பிளாட்டில் முதல் முறையாக தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே மெல்லிய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், மக்கள் நலன் கருதி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு…
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
கான்பூரில் பி.எச்டி (PhD) முடித்த ஒரு பெண், பெண் குழந்தை பிறந்த காரணத்திற்காகத் தனது கணவரால் கைவிடப்பட்டு, ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி…