தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பூந்தி மஹால் தெருவில் பூங்கொடி (50) என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் வளையல் கடை வைத்து தொழில் செய்து வருகின்றார். இவருடைய மூத்த மகள் மகாலட்சுமி (29) கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மகாலட்சுமி வெங்கடேஷ் தம்பதியினருக்கு 9 வயதில் நித்தீஷ் என்ற மகனும் ஐந்து வயதில் சாய் ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் எழுந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதனால் ஆத்திரமடைந்து மகாலட்சுமி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணவரிடம் சொல்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தர்மபுரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மகாலட்சுமியின் தாய் வீட்டுக்கு அவருடைய கணவர் வெங்கடேஷ் சென்றுள்ளார். பிறகு கரூரில் தாய் வீட்டில் இருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு இன்று காலை மீண்டும் அரூர் வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் கணவன் மனைவியிடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டபோது வீட்டில் இருந்த மகாலட்சுமியின் 70 வயது பாட்டியான லட்சுமி அம்மாள் இருவரையும் சமாதானம் செய்தார்.
இதனைப் பார்த்த பாட்டி லட்சுமி அவரது மகள் பூங்கொடியை அழைத்து வர பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் கணவன் மனைவி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் வெங்கடேஷ் வீட்டிலிருந்த கத்தியால் மகாலட்சுமியின் கழுத்து மற்றும் கையில் வெட்டியதில் படுகாயம் அடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அம்மா பூங்கொடி மற்றும் பாட்டி லட்சுமி வீட்டில் வந்து பார்த்தபோது மகாலட்சுமி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மகாலட்சுமி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மகாலட்சுமியை கொலை செய்த கணவரை தேடி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்றான 'போதைப்பொருள் தடுப்புப் படை' அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.…
தனது கணவன் மற்றும் 6 வயது பிஞ்சு மகளைத் தவிக்கவிட்டு, இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் ஓடிச் சென்ற சம்பவம்…
திருமண மேடையில் மணமகன் கழுத்தில் மாலை சூட வேண்டிய நேரத்தில், மணமகனைப் பார்த்தவுடன் மணப்பெண் திருமணத்தை நிறுத்தச் சொன்ன அதிர்ச்சி…
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணம் முடிந்த 14-வது நாளிலேயே மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சரியாக நள்ளிரவு 12:07 மணி. நிஷா தனது புதிய பிளாட்டில் முதல் முறையாக தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே மெல்லிய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், மக்கள் நலன் கருதி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு…