தன்னுடைய திருமண உறவை முறித்துக் கொண்டதை நடிகை மீரா வாசுதேவன் அறிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் விபின் உடனான திருமண உறவையே அவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் நடிகை மீரா வாசுதேவன். 2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். என் வாழ்க்கையின் மிக அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் நான் இருக்கின்றேன் என்று தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து மீரா instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி மீரா மற்றும் விபின் ஆகியோருக்கு திருமணம் நடந்தது.
கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலில் நடந்த சடங்குகளுக்கு பிறகு இருவரும் அதிகாரப்பூர்வமாக பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தன்மத்ரா திரைப்படம் மூலமாக மலையாள ரசிகர்களின் பிரியமான நடிகையாக மாறியவர்தான் இவர். குடும்ப விளக்கு உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். அந்த சீரியலின் ஒளிப்பதிவாளர் ஆன விபீனை திருமணம் செய்து கொண்டார். இது மீராவின் மூன்றாவது திருமணம் ஆகும்.
இதற்கு முன்னதாக விஷால் அகர்வால் என்பவரை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து அவரை 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு நடிகர் ஜான் கொக்கேனை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து அவரையும் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது இவருடைய மூன்றாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த அடங்கமறு திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…