சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கின்றது. தமன்னா. ராசி கண்ணா ஆகியோர் நடிப்பில் சுந்தர் சி என்பதில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. ஹாரர் காமெடி திரைப்படம் உருவான இந்த திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளிவந்தது.
கடந்த சில மாதங்களாக எந்த திரைப்படமும் அந்த அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில் இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தது. கமெண்ட்களை வைத்து ரசிகர்கள் தியேட்டர் நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்த திரைப்படம் வெளியான 2 நாட்களில் 11 கோடி வசூல் செய்து இருந்தது. இதனால் குஷ்பூ மற்றும் சுந்தர் சி இருவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பல தோல்வி படங்களுக்குப் பிறகு சுந்தர் சிக்கு ஒரு வெற்றிப் படம் கிடைத்துள்ளது.
இந்த திரைப்படத்தில் கடைசியாக குஷ்பு மற்றும் சிம்ரன் இருவரும் சேர்ந்து சாமி பாட்டுக்கு நடனமாடி இருந்தார்கள். இந்த பாடல் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தது. மேலும் இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு பாடலையும் நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கொடுத்த குஷ்பூக்கும் ஆட வைத்த பிருந்தா மாஸ்டருக்கும் நன்றி என்று சிம்ரன் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram