TRENDING
தன்னுடன் வேல செஞ்சவரையே காதலிப்பதாக சொன்ன மகள்.. துளியும் யோசிக்காமல் AR.ரகுமான் செய்த செயல்.. பலரும் அறியாத அவரது மறுபக்கம்..
ஏஆர் ரகுமான், இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் அறிமுகமான ஏஆர் ரகுமான், முதல் படத்திலேயே யார் இந்த பையன் என பேச வைத்தார். அந்த கால கட்டத்தில் மீசைக்கூட முளைக்காத பிளஸ் 2 மாணவர் போல தான் அவர் இருந்தார். பிறகு அவரது இசையமைப்பில் வந்த பல படங்கள் பேசப்பட்டன. குறிப்பாக பாடல்கள், இசை வேற லெவலில் இருந்தன. வசூல் ரீதியான சில படங்கள் தோற்றாலும், இசை பாடல்கள் அந்த படத்தில் அடையாளமாக இருந்தன. அதனால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தார் ஏஆர் ரகுமான். சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்கர் விருது இந்த இசைப்புயல் அதற்கு சொன்ன ஒரே பதில் ‘ எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பதுதான். அதுதான் அவரது குணமாக, வாழ்க்கையாக இருக்கிறது.
உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் அளவுக்கு புகழில், செல்வாக்கில், வசதியில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஏஆர் ரகுமான், தன் மகளுக்கு தன்னிடம் பணிசெய்யும் ஊழியருக்கு திருமணம் செய்து வைத்தார் என்பது இன்னும் பலருக்கு தெரியாத உண்மை. அதாவது, ஏஆர் ரகுமான் எப்போதும் மற்றவர்கள் மீது ஆதிக்கமோ, அதிகாரமோ செலுத்தாத பண்பான மனிதர். அந்த வகையில் தன் குடும்பத்திலும் அப்படி தான் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடுவது இல்லை. ஒரு மகள் ஜீன்ஸ் டீசர்ட் என மாடர்ன் ஆக டிரஸ் செய்கிறார். மற்றொரு மகள் பர்தா அணிகிறார். இது அவரவர் விருப்பபடி நடக்கிறது. யாரையும் எந்த நிர்பந்தமும் செய்வதில்லை.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பத்திரிகையாளர் ராஜகம்பீரன் கூறியதாவது, ஏஆர் ரகுமான் எப்போதுமே தனித்துவம் மிக்கவராக தான் நடந்துக்கொள்கிறார். தனது ஒலிப்பதிவு கூடத்தில், சவுண்ட் என்ஜினியராக பணிபுரியும் ஒரு ஊழியருக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கிறார். இது ஸ்டேட்டஸ் பார்த்து செய்யாத திருமணம். அவர் நினைத்திருந்தால் பெரிய இடத்தில் தன் மகளுக்கு, வரன் பார்த்திருக்க முடியும். பையன் கேரக்டர் நன்றாக இருப்பதை பார்த்து, தன் மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
கொரோனா காலகட்டத்தை அடுத்து நடத்தப்பட்ட எளிமையான திருமணம். அளவான உறவுகள், நண்பர்களை அழைத்து திருமண விழாவை நடத்தினார். தன்னிடம் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு தன் மகளையே திருமணம் செய்து வைப்பது எல்லாம், ஏஆர் ரகுமானின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அவரது நிகரற்ற சிறந்த குணத்தை வெளிப்படுத்துகிறது, என்று கூறினார்.