தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), பல்வேறு துறைகளில் உள்ள 70 தொழில்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கணக்கு அதிகாரி, உதவி இயக்குநர் (வேளாண்மை), சீனியர் அதிகாரி போன்ற உயரிய பதவிகள் அடங்கும்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கப் பதவிகளுக்கு ஏற்ப சிஏ (CA), சட்டப்படிப்பு அல்லது முதுநிலை வேளாண்மைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு ஆரம்ப கால ஊதியமாக 66,200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 86,300 ரூபாய் வரை கைநிறையச் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் மார்ச் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். இதில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது; அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பொதுப்பிரிவினருக்கு 32 வயது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதர பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்; எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டண விலக்கு உண்டு.
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…
வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…
"இன்னொரு ஆண் பிள்ளை வேண்டும்" என்ற ஆசையினால், 22 வயதே ஆன இளம் பெண் ஒருவர் தனது 8 வருட…
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில், 90 வயதான முதியவர் ஒருவரின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.500-ஐப் பெறுவதற்காக, அவருடைய மருமகள்…
கனடாவிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தனிமை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தானாகவே முன்வந்து மீண்டும் தாய்நாட்டிற்குத்…
டெல்லியின் பரபரப்பான லஜ்பத் நகர் பகுதியில் 'கேரிமென்' (CarryMen) என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கியுள்ள விசித்திரமான சேவை, தற்போது…