பணியாளர் தேர்வாணையம் (SSC), மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்காக, “ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (CGL), 2026”-க்கான அறிவிப்பை 21.05.2026 அன்று வெளியிட்டுள்ளது. இந்தத் திறந்தநிலை போட்டித் தேர்வின் மூலம் நாடு முழுவதும் சுமார் 12,256 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த அரிய வாய்ப்பிற்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த தகுதியுடைய பட்டதாரி விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in மூலமாகவோ அல்லது ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் உள்ள ‘mySSC’ செயலி வழியாகவோ இணையவழியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 22.06.2026 (இரவு 11:00 மணி) கடைசி நாளாகும். மேலும், இதற்கான இணையவழிக் கட்டணத்தைச் செலுத்த 23.06.2026 (இரவு 11:00 மணி) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால், உதவி பெற 1800 309 3063 என்ற கட்டணமில்லா உதவி எண்ணையும் ஆணையம் வழங்கியுள்ளது.
இவற்றுக்கான கணினி வழித் தேர்வு (Tier-I) தோராயமாக 2026 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தென் மண்டலத்தைப் பொறுத்தவரை, ஆந்திரப் பிரதேசத்தில் 13, புதுச்சேரியில் 01, தமிழ்நாட்டில் 09, தெலங்கானாவில் 04 என மொத்தம் 27 தேர்வு மையங்கள்/நகரங்களில் இப்போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. காலிப் பணியிடங்களின் பதவி விவரங்கள், வயது வரம்புகள், அத்தியாவசியக் கல்வித் தகுதிகள், தேர்வுக்கான கட்டணங்கள், தேர்வுத் திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் தொடர்பான முழுமையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாகக் கண்டறியலாம்.
ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற…
ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக நிலைத்தன்மையின் அடையாளமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும்…
உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…
"கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் பேசியபோது எனக்கு…