“என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்!”.. போலீசுக்கு போன் செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த சில காலமாகவே சரவணன் தனது மனைவி சிவரஞ்சனியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் மே 23 அன்று இருவருக்குள்ளும் மீண்டும் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சரவணன் வீட்டில் இருந்த மின் மோட்டாரைத் தூக்கி சிவரஞ்சனியின் தலையில் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சிவரஞ்சனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சரவணனே திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலம் அருகே சரவணன் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சரவணனைக் கைது செய்த போலீசார், சிவரஞ்சனியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“நான் சொல்றதைத்தான் அவர் செய்வார்!”.. இஸ்ரேல் பிரதமரை ஒற்றை வார்த்தையில் அடக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. ஈரான் விவகாரத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!

ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க…

54 minutes ago

டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!.. 12,256 காலிப் பணியிடங்கள்.. SSC வெளியிட்ட மெகா அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!!!

பணியாளர் தேர்வாணையம் (SSC), மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப்…

1 மணத்தியாலம் ago

“தோனி இல்லாத சிஎஸ்கே அவ்வளவுதானா?.. அடுத்த 5 வருஷத்துக்கு கப் கிடையாது?.. அதிரவைக்கும் முன்னாள் வீரரின் கணிப்பு”..!!

ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக நிலைத்தன்மையின் அடையாளமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும்…

1 மணத்தியாலம் ago

“அடுத்த 24 மணி நேரத்தில் உலக வரைபடம் மாறப்போகிறதா?”… அமெரிக்கா – ஈரான் எடுத்த அந்த ஒற்றை முடிவு… திரைக்குப் பின்னால் நடந்த நள்ளிரவுப் பேச்சுவார்த்தை….!

உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…

1 மணத்தியாலம் ago

“சிஎம் விஜய் போட்ட ரகசிய உத்தரவு”…. தமிழகத்தில் நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்… அதிர்ந்து போன அதிகாரிகள்…!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…

2 மணத்தியாலங்கள் ago

“என் மேல புகார் கொடுத்தவங்க லிஸ்ட் என்கிட்ட இருக்கு!”.. கார்த்தி சிதம்பரம் எம்பி பேசிய ஆடியோ லீக்… அலறும் அரசியல் களம்..!!

"கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் பேசியபோது எனக்கு…

2 மணத்தியாலங்கள் ago