“விஜய் வெறும் பொம்மை முதல்வர்”…. ’லாட்டரி’ ஆதவ் தான் ஆக்டிங் முதல்வர்… அனிதா ராதாகிருஷ்ணன் உடைத்த அதிரடி ரகசியம்… பரபரப்பு…!

Spread the love

தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மற்றும் அதன் முதல்வர் விஜய் மீது மிகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணை தன்னை எந்த வகையிலும் நெருக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய தவெக அரசின் பின்னணியில் லாட்டரி மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தான் உண்மையான ஆளுமையாகச் செயல்பட்டு வருவதாக அதிரடியான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை ஓரங்கட்டிவிட்டு, லாட்டரி சீட்டு கும்பலாக இருக்கிற ஆதவ் அர்ஜுனா தான் அந்த கட்சியை முழுமையாகக் கைப்பற்றப் போகிறாரா என்று தவெக தொண்டர்களே பேசிக் கொள்கிறார்கள். லாட்டரி சீட்டு மூலம் கிடைத்த பணத்தைத் தமிழகத்தில் ஊடுருவ விட்டு, பொம்மையாக ஒருவரை முன்னிறுத்திவிட்டுப் பின்னணியில் இருந்து ஆட்சி நடத்தலாம் என்று கனவு காண்கிறார்கள். தவெக தொண்டர்கள் இந்த விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்” என்று எச்சரித்தார்.

தொடர்ந்து தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “இன்றைக்குத் தமிழக முதல்வர் விஜய் வருகிறார், போகிறார். ஆனால், அரசிடமிருந்து வரும் முக்கிய அறிக்கைகள் அனைத்தும் ஆதவ் அர்ஜுனா என்ற லாட்டரி கும்பல் மூலமாகத்தான் வருகிறது. தனது பணத்தை எல்லாம் தமிழகத்தில் இறைத்துவிட்டு, இங்கு மீண்டும் லாட்டரி விற்பனையைக் கொண்டு வந்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. கோவை, சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்தும் நடக்கும் வேளையில் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறதா?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், தவெக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சாடிய அவர், “மாதம் 2500 ரூபாய் தருவதாகக் கூறினார்கள், தரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பிறகுதான் 1000 ரூபாயாவது கொடுத்தார்கள். மீனவர்களுக்கு 20,000 ரூபாய், பெண்களுக்குப் பேருந்துகளில் இலவச பயணம், தாய்மாமன் சீர் எனப் பொய் வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர்; இதற்கு அவர்கள் சட்டமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்” என்றார். இறுதியாக, தன் மீதான அமலாக்கத்துறை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து கவலைப்படவில்லை என்றும், தவெக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறி அவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி..! இனி கிராமங்களுக்கும் மின்னல் வேக டெலிவரி… பிளிப்கார்ட் – இந்திய தபால் துறை போட்ட மாஸ் டீல்..!!

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…

2 minutes ago

“அடிதடி இல்லை.. சத்தமே இல்லை!.. குப்பையை உங்களுக்கே திருப்பித் தர்றேன்.. சுற்றுலாப் பயணிக்கு உள்ளூர் நபர் கொடுத்த ‘தரமான’ செய்கை.. வைரல் வீடியோ”..!!

முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…

3 minutes ago

நெஞ்சை உலுக்கும் வக்கிரம்..! நாயை கூட விடமாட்டீங்களா..? யாருக்கும் தெரியாமல் பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. சிசிடிவி காட்சியால் பயங்கர ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

4 minutes ago

மீண்டும் நடிக்க வரும் உதயநிதி?…. பின்னணியில் இருக்கும் அந்த ‘பவர்ஃபுல்’ அரசியல் பிளான்…. டிவிட்டரை அதிர வைக்கும் ‘அந்த’ ஒரு நியூஸ்….!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் எனப் பல முகங்களுடன் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு…

4 minutes ago

கணவனுக்கு நேர்ந்த கொடூரம்: கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றுவிட்டு சடலத்தின் அருகிலேயே.. காதலனுடன் மனைவி செய்த காரியத்தால் ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது சகோதரி மற்றும்…

7 minutes ago

போடு ரகிட ரகிட… இனி இவர்களுக்கும் வருகிறது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500…. தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள்…

9 minutes ago