துரோகத்தின் உச்சம்!.. “என் கூடவே இருந்துட்டு இதையா செஞ்ச?”… நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்… ஆத்திரத்தில் நண்பன் செய்த வெறிச்செயல்… பதறவைக்கும் பின்னணி…!!!

Spread the love

ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் திருப்பதியில் பானிபூரி கடை நடத்தி வரும் அஜித்குமார் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஜெயக்குமாருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அஜித்குமாருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். நண்பர்களாகப் பழகி வந்த இவர்களுக்கு இடையே, ஜெயக்குமாரின் மனைவி சிவரஞ்சனியுடன் அஜித்குமாருக்கு ஏற்பட்ட பழக்கத்தால் மோதல் உருவானது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவரஞ்சனிக்கும் அஜித்குமாருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜெயக்குமாருக்குத் தெரியவரவே, குடும்பத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டது. ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும், சிவரஞ்சனியும் அஜித்குமாரும் தங்களது உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர். மேலும், அஜித்குமார் சிவரஞ்சனியுடனான தனிப்பட்ட வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படும் செயலால் ஜெயக்குமார் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.

இந்தச் சூழலில், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி ஜெயக்குமார் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு மொபட்டில் சென்றுகொண்டிருந்த ஜெயக்குமார் மீது திட்டமிட்டுத் தனது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது மோதி நின்றதால் ஜெயக்குமார் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். அப்போது ஜெயக்குமாருக்கு அஜித்குமார் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் மற்றும் விவாகரத்து வழக்கால் ஏற்பட்ட முன்விரோதமே இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமாரை போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பனின் மனைவியுடன் உறவு வைத்துக்கொண்டு, நண்பனையே கொலை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

BREAKING: விரும்புபவர்கள் பதவி விலகிக்கொள்ளலாம்.. சாட்டையை சுழற்றிய மு.க ஸ்டாலின் ..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் அமைப்பு ரீதியாகப்…

12 minutes ago

“யாராலும் தப்பிக்க முடியாது உலகமே அழிந்துவிடும்” அமெரிக்காவுக்கு சீனா விடுத்த இறுதி எச்சரிக்கை – ஷி ஜின்பிங் பேச்சால் உலக நாடுகளில் நிலவும் பெரும் பதற்றம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தைப்…

15 minutes ago

குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி கூடுதல் விலைக்கு மது விற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…

30 minutes ago

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை தொடரும்… தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…

31 minutes ago

விலகுகிறேன்..! “முஸ்லிம்களுக்கு அதிமுகவில் அங்கீகாரம் இல்லை” ஜவஹர் அலி அதிரடி ராஜினாமா.. அதிர்ச்சியில் எடப்பாடி..!!

"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…

34 minutes ago