“செம ட்விஸ்ட் கொடுத்த திருச்சி பேனர்கள்! – எல்லா தலைவர்களும் இருக்காங்க.. இவரு மட்டும் ஏன் இல்லை? – எகிறும் அரசியல் சூடு!”

Spread the love

திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் பேனர்களில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்தப் பொதுக்கூட்டத்திற்காக நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரின் படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பிரதான கூட்டணிக் கட்சியான அதிமுகவின் தலைவரது படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்த மோதல் போக்கு கூட்டணிக்குள் விரிசல் உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. வரவேற்பு வளைவுகளில் பிரதமர் மோடி, அமித்ஷா முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்களான அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜிகே வாசன் ஆகியோரது படங்கள் வரை இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் எடப்பாடி பழனிசாமியின் படம் மட்டும் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளதா அல்லது இது ஒரு கவனக்குறைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக இதே போன்ற ஒரு கூட்டத்தில் பெரியார் படம் வைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், தற்போது எடப்பாடியின் படம் விடுபட்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு ‘புறக்கணிப்பு’ என்றே அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் கருதுகின்றனர்.

பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் திருச்சி வரவுள்ள நிலையில், மேடை அலங்காரம் மற்றும் பேனர்களில் ஏற்பட்டுள்ள இந்தச் சர்ச்சை சமூக வலைதளங்களிலும் விவாதமாகியுள்ளது. கூட்டணிக்குள் சுமூகமான உறவு இருப்பதாகத் தலைவர்கள் கூறி வந்தாலும், கள யதார்த்தத்தில் இதுபோன்ற செயல்கள் கூட்டணி ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்த விவகாரம் குறித்து பாஜக தரப்பிலிருந்தோ அல்லது அதிமுக தரப்பிலிருந்தோ இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

Muthu Mani

Recent Posts

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

5 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

15 minutes ago

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

53 minutes ago