#image_title
மிக்ஜம் புயலால் சென்னை மழைவெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது. வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கிய நிலையில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பலரும் அவதிப்பட்டனர். பல இடங்களில் மின்சாரம் தடைபட்டு போனது. குடிநீர் இல்லாமல், உணவு, பால் போன்ற அத்யாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிபட்டனர். இந்த சூழலில் சினிமா நடிகர்கள் சிலர், தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். கேபிஒய் பாலா, ரூ.5 லட்சம் வரை தனது சொந்த பணத்தை செலவு செய்துள்ளார். சூர்யா கார்த்தி தரப்பில் ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன் தரப்பில் ரூ. 10 லட்சம் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியாக தந்துள்ளனர்.
#image_title
இதில் அஜீத் தரப்பில் இருந்து எந்தவிதமான உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்படவில்லை. 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அஜீத் போன்ற டாப் ஸ்டார்கள் நடிகர்கள் இப்படி மக்களுக்கு உதவவில்லையே. குறிப்பாக கலக்கப்போவது யாரு பாலா போன்ற சின்ன நடிகர்கள் கூட ரூ. 5 லட்சம் வரை உதவியாக செய்கின்றனர். பார்த்திபன், அறந்தாங்கி நிஷா போன்றவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து உணவு பொட்டலங்களை தந்தனர். ஆனால் அஜீத் இதற்கு உதவவில்லையே என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
#image_title
ஆனால் அஜீத்குமார் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்திருப்பதாக பத்திரிகையாளர் சபீதா ஜோசப் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை கூறியிருக்கிறார். இப்போது சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 பேரை தனது வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இதுதவிர தமிழக அரசுக்கு பொது நிவாரண நிதியாக ரூ. 2கோடி வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களில் 150 பேருக்கு தலா 10 ஆயிரம் என அவர்களது வங்கி கணக்கில் போடச் செய்துள்ளார். மழைவெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்க போட் அனுப்பியும் உதவி இருக்கிறார். அஜீத் வீட்டில் இருந்து பலருக்கும் பிரியாணி சமைத்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இப்படிபட்ட பல உதவிகளை செய்த அஜீத்குமார் இவற்றை வெளிப்படையாக, விளம்பரப்படுத்தி செய்யவில்லை. அதனால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை என சபீதா ஜோசப் கூறியிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…