CINEMA
லியோ, ஜெயிலர் படத்தை தொடர்ந்து இந்த வருடம் 500 கோடி வசூலில் சேர்ந்த அடுத்த படம்… தூள் கிளப்பிய பிரமாண்ட நாயகன்…
‘கே ஜி எஃப்’ என்ற பிரம்மாண்ட படைப்பை கொடுத்து அதன் இரண்டு பாகங்களையும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆக்கியவர் பிரசாந்த் நீல். இவர் இயக்கத்தில் தற்பொழுது பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சலார். ‘ கே ஜி எஃப்’ படத்தை தயாரித்த ஓம் பாலி பிலிம்ஸ் நிறுவனம் தான் இத்திரைப்படத்தையும் தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் பிரித்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக ரிலீஸ் ஆனது. டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆன இத்திரைப்படம் முதல் நாளிலேயே 175 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்தது.
சலார் திரைப்படத்துக்கு போட்டியாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள டன்கி திரைப்படமும் ரிலீஸானது. ஆனால் சலார் திரைப்படம் எதிர்பாராத வசூல் சாதனையை தற்பொழுது புரிந்து வருகிறது. இந்நிலையில் இந்நிலையில் 4 நாட்களைக் கடந்த இத்திரைப்படத்தின் வசூல் 450 கோடியை கலந்து 500 கோடியை எட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இத்திரைப்படம் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் முதல் வாரத்தில் 400 கோடியை கடந்து சாதனை செய்தது. இதனை முறியடித்து 4 நாட்களில் 450 கோடியை கடந்து 500 கோடியை எட்டி, ராஜ மவுலியின் பாகுபலிக்கு பின் 500 கோடி கிளப்பில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சலார் திரைப்படத்தின் மூலம் ஒரு மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ்.