CINEMA
ஆள் அடையாளமே தெரியாம மாறிய 90’ஸ் பிரபல நடிகை அஞ்சு.. இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?
தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி கண்மணி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கின்றார். குமரியான பிறகு ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் கேளடி கண்மணி. இந்த திரைப்படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்தார்.
தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் அஞ்சு. பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து வாய்ப்புகள் குறைய சீரியல்களிலும் பணியாற்றி இருக்கின்றார்.
தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது டைகர் பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாற அவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். டைகர் பிரபாகனை காதலித்தபோது நடிகை அஞ்சுக்கு வயது 17 ஆனால் டைகர் பிரபாகரனுக்கு வயது 48. அப்பா வயதில் இருந்த நடிகரை பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.
அப்படி இருந்தும் இவரின் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு கூட நீடிக்கவில்லை. 1996 ஆம் ஆண்டு டைகர் பிரபாகரனை விவாகரத்து செய்தார். விவாகரத்து செய்யும் போது அவர் கர்ப்பமாக இருந்தார். தற்போது அவருக்கு 25 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். சமீபத்திய ஊடகத்திற்கு கூட அவர் பேட்டி அளித்திருந்தார். எனது குடும்பத்தார்களை எதிர்த்து டைகர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு முன்னதாகவே அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் ஆகியிருக்கின்றது.
மேலும் என்னை விட மிகப்பெரிய பிள்ளைகள் அவருக்கு இருந்தார்கள். ஆனால் அது எதுவுமே எனக்குத் தெரியாது. நான் கர்ப்பமாக இருந்தபோது டைகர் பிரபாகரன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். இதனால் அவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டேன் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை என்ன ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார் பேபி அஞ்சு கூறிவருகிறார்கள்.