CINEMA
ஒன்னரை வருடங்களுக்கு பிறகு… மகளின் புகைப்படத்தை பகிர்ந்து எமோஷனல் ஆன நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்..
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமடைந்தவர். இந்நிகழ்ச்சியில் பிரச்சனைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை. இவர் நடுவராக இருந்து தீர்ப்புகளை வழங்கி பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றுகிறார். அவருடைய நடிப்பில் வெளியான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்திற்காக சமீபத்தில் தமிழக அரசின் மாநில விருதினை பெற்றுள்ளார்.
இவருக்கு ஷ்ரதா , ஸ்ருதி, ஸ்ரேயா மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மகள் ஸ்வேதாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். மகள் ஸ்ரேயாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை அளித்த பின்னர் தற்பொழுது நலமாய் உள்ளார்.
தற்பொழுது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகள் பூரண குணமடைந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ‘நம்பிக்கை மற்றும் சுய ஒழுக்கம், #NeverGiveUp மனப்பான்மை ஆகியவை நெருக்கடியின் மூலம் செல்ல எங்களுக்கு உதவியது. 1 1/2 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரேயா இப்போது முற்றிலும் இயல்பாக இருக்கிறார். அது ஒரு மருத்துவ தவறு என்பது தெளிவாகிறது. எவ்வாறாயினும், உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
துன்பம் எனக்கு நல்லது என்று கருத்து தெரிவித்தவர்களுக்கு, உங்கள் மனநிலையை நீங்கள் வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி மற்றும் எனக்கு சில வெறுப்பாளர்கள் உள்ளனர், நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் எந்த நபராலும் அனைவரையும் மகிழ்விக்க முடியாது. எனக்கு சில வெறுப்பாளர்கள் இருப்பதில் பரவாயில்லை.’ என்று எமோஷனலாக மகளின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…
View this post on Instagram