தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் மறுபக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூர் விவகாரத்தில் சிக்கிய விஜய்க்கு ஆதரவாக அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் செயல்பட்டன. சமீபத்தில் கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜயை தங்கள் பக்கம் இருக்கும் முயற்சியில் தொடர்ந்து இபிஎஸ் ஈடுபட்டு வருகின்றார்.
சமீபத்தில் கூட தேர்தல் பிரச்சாரத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக அவர் சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கரூர் விவகாரத்தை அதிமுக கூட்டணிக்காக பயன்படுத்துகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது அரசியல் களத்தை தீவிரமாக்கியுள்ளது. கூட்டணிக்காக அல்ல தமிழக மக்கள் என்பதால் பேசுகிறோம் என்று இபிஎஸ் பதிலடி கொடுத்தார். ஆனால் முதல்வரே அதுவும் பேரவையில் இந்த விவகாரத்தை பேசியதால் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இடையே மறைமுக கூட்டணி பேச்சு நடப்பதை உறுதி செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…