அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. இபிஎஸ்-ஐ கழற்றிவிட துணியும் இரு தூண்கள்… தவெக-வில் இணையும் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்?… பரபரப்பு தகவல்…!

Spread the love

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் மீண்டும் இணைந்துவிட்டதாக அறிவித்த போதிலும், கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் பரபரப்பும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த இணைப்பு நிகழ்வை முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ஜயபாஸ்கர் ஆகியோர் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் மண்டியிட விரும்பாத சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவரைச் சமாதானப்படுத்த மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், விராலிமலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சி.வி.ஜயபாஸ்கர், அதிமுகவில் தொடரலாமா அல்லது புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளார்.

கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் ஒரே தரப்பிடம் குவிந்து கிடப்பதும், இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதும் பல சீனியர் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், “இனி அதிமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா?” என்ற சந்தேகம் கட்சிக்குள்ளேயே வலுவாக எழுந்துள்ளது. எதிர்கால வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருவதாகக் கருதும் சில முக்கிய முகங்கள், தங்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) நோக்கி அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலர் நகரத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன் போன்ற மூத்த நிர்வாகிகளும், 4 அதிமுக எம்எல்ஏக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தவெகவை “புதிய அதிமுக” என்று வர்ணித்துள்ள நிலையில், தவெகவின் வளர்ச்சிக்கு பழைய அதிமுகவினரின் பங்களிப்பு இன்றியமையாததாக மாறி வருகிறது.

தற்போது சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையக்கூடும் என்ற தகவல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இதுகுறித்து அவர்கள் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும், எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவது இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. ஒருவேளை, வடக்கு மற்றும் மத்திய தமிழகத்தில் பலத்த செல்வாக்குக் கொண்ட இந்த இரு முக்கிய முகங்களும் கட்சியை விட்டு விலகினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு மீள முடியாத ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

9 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

9 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

10 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

10 மணத்தியாலங்கள் ago