CINEMA
கடையே திறக்கலாம் போல..! ஒரு பிளாட் முழுக்க அது மட்டும் தான் இருக்குதாம்.. உண்மையை சொன்ன சின்னத்திரை நடிகைகள்..!!
ரட்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான உப்பு கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரட்சிதா பிரபலமானார்.முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி, ஸ்டார் ஸ்வர்ணாவில் ஒளிபரப்பான கீமாஞ்சலி உள்ளிட்ட தொடர்களில் ரட்சிதா நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனது ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரச்சிதா தன்னிடம் ஐந்தாயிரம் புடவைகள் இருப்பதாகவும், பெங்களூரில் இருக்கும் பிளாட் முழுவதும் புடவைகளை வைத்திருப்பதாகவும் கூறினார்.
இதனை கேட்டதும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆச்சரியமடைந்தார். இதேபோல மற்றொரு பிரபல சின்னத்திரை நடிகையான எதிர்நீச்சல் தொடர் ரேணுகா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியதர்ஷினியும் தன்னிடம் கட்டாத புடவை ஆயிரத்திற்கும் மேல் இருப்பதாக கூறினார். இதனை கேட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.