#image_title
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை வி ஆர் திலகம். இவர் அந்த காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அசத்தியவர். இவர் அவளுக்கு நிகர் அவளே, சர்வர் சுந்தரம், சூதாட்டம், பிராயசித்தம், தசாவதாரம், குமரிக்கோட்டம், வா ராஜா வா, வந்தாலே மகராசி, பேர் சொல்ல ஒரு பிள்ளை, மாணிக்கத் தொட்டில், காரைக்கால் அம்மையார், நீ ஒரு மகராணி, புதிய வாழ்க்கை என நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை வி ஆர் திலகம் அவர்கள் நடிகர் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் அந்த காலகட்ட தமிழ் படங்களில் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் .தற்பொழுது இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வி ஆர் திலகம் அவர்கள் தனது கணவருடன் இணைந்து கொடுத்த பேட்டியானது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘தான் முதன் முதலில்’ உனக்கும் எனக்கும்’ என்ற திரைப்படத்தில் நடித்ததாகவும், அதில் எம் ஆர் ராதா வாசு, ஜோ இருவருக்கும் அம்மாவாக நடித்ததாகவும், இந்த திரைப்படத்தின் ஹீரோ ஜெய்சங்கர் என்றும் குறிப்பிட்டார். தன்னை விட வயதில் மூத்த நடிகர்களுக்கு அம்மாவாக 21 வயசிலேயே நடிக்க காரணம் , என்னுடைய குடும்ப கஷ்டம் தான். நான் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை’ என்று மனம் திறந்து பேசி உள்ளார். இதோ இந்த பேட்டி….
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…