தமிழ் திரையுலகில் முன்னணி பின்னணி பாடகியாக விளங்கும் ஸ்வாகதா கிருஷ்ணன், பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது அண்மையில் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். யூடியூப் நேர்காணல் ஒன்றில் இது குறித்துப் பேசிய அவர், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இசையமைப்பாளரின் ஸ்டூடியோவிற்குச் சென்றபோது தமக்குக் கடுமையான பாலியல் அத்துமீறல்களும், மன ரீதியான துன்புறுத்தல்களும் அரங்கேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த நபர் ஸ்டூடியோவிற்குள் ரகசிய கேமராக்களைப் பொருத்திப் பல பெண்களைத் தவறாக வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும், இந்த விவகாரங்கள் அனைத்தும் அவரது மனைவிக்கும் தெரிந்தே இருப்பதாகவும் கூறி அவரை “மெட்ராஸின் எப்ஸ்டீன்” என சாடியுள்ளார். இந்த அதிர்ச்சித் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு நேர்ந்த கொடுமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தாம் சென்னையை விட்டு வெளியேறி ரிஷிகேஷிற்குச் சென்றதாகக் கூறியுள்ள ஸ்வாகதா, தற்போதும் அந்த நபர் பல பெண்களைத் தன் வலையில் வீழ்த்தி வருவதால் சட்டப்படி போராடத் துணிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அந்த நபர் யார் என்று கணித்துக் கூறி வரும் நிலையில், அவதூறு வழக்குக்கான செலவை ஏற்பதாக இருந்தால் அந்த இசையமைப்பாளரின் பெயரை பகிரங்கமாக அறிவிக்கத் தயாராக இருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுக்கவே தாம் சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதால் வீணான அவதூறு வழக்குகளில் சிக்கித் தனது சட்டப் போராட்டத்தை முடக்க விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினுமே முழு…
தனது கொழுந்தன் மீது கொண்ட அதீத காதலால், குறுக்கே நின்ற கணவனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்…
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, அபிஷேக்…
நடிகர் பிரகாஷ் ராஜின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜ் மோகன் ஆவேசமாகப்…
கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…