தமிழ்நாட்டில் மே 2026 மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ₹1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக முன்னதாக வெளியிட்ட செய்தி அறிக்கையில் தேர்தல் வாக்குறுதியின்படி தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கும், திட்டத்தை முழுமையாக மறுசீரமைப்பு செய்வதற்கும் அரசுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்திருந்தார். இந்த மறுசீரமைப்புப் பணிகள் முடியும் வரை, தகுதியுள்ள 1.31 கோடி பெண்களுக்கும் வழக்கமான ₹1,000 உரிமைத்தொகை எவ்விதத் தாமதமும் இன்றி நேரடியாகச் செலுத்தப்படும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 15 மே 2026 அன்று காலையிலேயே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்பட்டு, இல்லத்தரசிகளுக்குப் பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முந்தைய திமுக ஆட்சிக்கால மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், இத்தொகை தடையின்றி வழங்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உங்களது வங்கிக் கணக்கிற்கு இந்த மாதத்திற்கான உரிமைத்தொகை வந்துவிட்டதா என்பதை அறிய, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது வங்கி குறுஞ்செய்தி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினுமே முழு…
தனது கொழுந்தன் மீது கொண்ட அதீத காதலால், குறுக்கே நின்ற கணவனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்…
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, அபிஷேக்…
நடிகர் பிரகாஷ் ராஜின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜ் மோகன் ஆவேசமாகப்…
கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…