நான் என்ன துரோகம் செஞ்சேன்.. என் பதவியை பறிச்சிட்டாங்களே… கண்ணீர் சிந்திய அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்..!!

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான இரு அணிகளாக கட்சி பிளவுபட்டுள்ள சூழலில், தமிழக முதல்வர் விஜய்யின் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிருப்தியடைந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் உத்தரவை மீறியதாகக் கூறி முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் பெஞ்சமின் உள்ளிட்ட 26 பேரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “நான் இயக்கத்திற்கு என்ன துரோகம் செய்தேன்? எதற்காக எனது பதவி பறிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பிய அவர், எவ்வித விளக்கமும் கேட்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். தான் எப்போதும் கட்சிக்கும், சின்னத்திற்கும் விசுவாசமாக இருப்பவன் என்றும், தனது உழைப்பிற்கு கிடைத்த பரிசாகவே இந்த பதவி நீக்கத்தைப் பார்ப்பதாகவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின், தான் கடந்த ஐந்து ஆண்டுகள் அமைச்சராகவும், துணை மேயராகவும் ஜெயலலிதாவின் பாராட்டைப் பெறும் வகையில் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கு உறுதுணையாக இருந்த தனக்கு, தற்போது அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தமக்கு ஆறுதல் கூறிய நிலையில், தற்போது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த சமயத்தில் முன்னறிவிப்பின்றி பதவியைப் பறித்தது பெரும் மனவேதனையை அளிப்பதாகக் கூறி அவர் கண்ணீர் சிந்தினார்.

Soundarya

Recent Posts

“திருமண உடையுடன் படுக்கையறையில் காத்திரு”… ஆபாச வீடியோவைக் காட்டி காதலியை மிரட்டிய கொடூர காதலன்… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

அஜய் என்பவன் திருஷ்டியை மிரட்டி, கட்டாயப்படுத்தி ஒரு திருமணப் பெண்ணைப் போல அலங்காரம் செய்துகொண்டு படுக்கையறையில் காத்திருக்குமாறு கூறுகிறான். "இதைத்…

34 seconds ago

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்கள்!… எண்ணிப் பார்த்தால் தலை சுற்றும்… உலகையே அதிர வைத்த டொனால்ட் டிரம்பின் மெகா அணிவகுப்பு… வியக்க வைக்கும் வைரல் வீடியோ….!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சென்றபோது, அவருடன் சென்ற பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி…

16 minutes ago

டிக்கெட் செக் பண்ண வந்த இடத்தில் ‘டாக்டராக’ மாறிய TTE!… ஓடும் ரயிலில் பிறந்த உயிர்… இணையத்தைக் கலக்கும் நெகிழ்ச்சிச் சம்பவம்!

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய டிக்கெட் பரிசோதகரின் (TTE) மனிதாபிமானச் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் எக்ஸ்பிரஸ்…

26 minutes ago

மகளிருக்கு அடித்தது ஜாக்பாட்..! உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்வு..? முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழக மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து ஆராய முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு…

32 minutes ago

“டேய் அவ என் பொண்டாட்டி டா” மனைவியுடன் தனிமையில் இருந்த நண்பன்… அந்தரங்க உறுப்பில் தீ வைத்து… கணவன் செய்த கொடூரம்..!!

காதலனை வீட்டிற்கு வரவழைத்த மனைவியால் ஏற்பட்ட விபரீத மோதலில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் காதலனுக்கு மிகக் கொடூரமான தண்டனை அளித்த…

36 minutes ago

என்னாது.. மானுக்கு போதையா?.. இந்த மான் பண்ண வேலை இருக்கே.. சிரிப்பை அடக்க முடியாது… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

பிரான்ஸ் நாட்டு கிராமப்புறங்களில் போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடும் மான்களின் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. காடுகளில்…

37 minutes ago