Categories: சினிமா

இதுவரை மர்மம் விலகாத நடிகை ஸ்ரீதேவியின் மரணம்.. பல வருடம் கழித்து பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்..

Spread the love

நடிகை ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக தமிழ் படங்களில் அறிமுகமாகி பின் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் கதாநாயகியானார். ரஜினி, கமல் என 1980களில் நடித்து, தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் இந்திக்கு போன ஸ்ரீதேவி அனில் கபூருடன் அதிக படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அனில் கபூரின் அண்ணன் போனி கபூரையே திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் துபாயில் நடந்த தனது இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்ற அவர், ஓட்டலில் தங்கியிருந்த போது அங்கிருந்த பாத்ரூமில் பாத்டப்பில் இறந்து கிடந்தார்.

Sridevi

இதையடுத்து அவரது மரணம் மர்மமாக பேசப்பட்டது. இயற்கையாக அவர் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தது. துபாய் போலீசார் விசாரணை நடத்தி, ஸ்ரீதேவி இறப்பு தற்செயலானது என அந்த வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், ஸ்ரீதேவி விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக ஒரு பயங்கர தகவல் இப்போது வைரலாகி வருகிறது. ஸ்ரீதேவியின் தீவிர ரசிகையான தீப்தி பென்னட்டி என்பவர், ஸ்ரீதேவியின் தீவிர ரசிகை. ஈவென்ட் மேனஜராக இருக்கும் அவர் ஸ்ரீதேவி இறப்பதற்கு ஒரு வாரம் முன் உத்தரபிரேதசம் லக்னோவில் சந்தித்து பேசி இருக்கிறார். அவர் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் ஸ்ரீதேவி சம்மதித்து இருக்கிறார். இந்நிலையில் அவர் மர்மமாக இறந்துள்ளார்.

Sridevi

துபாயில் உள்ள டிடெக்டிவ் ஏஜண்டுகளை வைத்து, போலீசார் விசாரணை, பத்திரிகைகளில் வெளியான தகவல்களில் அடிப்படையில் ஒரு பெண் துப்பறிவாளராக மாறி, தீப்தி பென்னட்டி பல விசாரணைகளை நடத்தி துப்பறிந்திருக்கிறார். இதில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகளை செயலிழக்க வைக்கும் பாம்பு விஷத்தை பால் போன்ற ஏதோ ஒரு பொருளில் கலந்து ஸ்ரீதேவி கொடுக்கப்பட்டுள்ளது. அது சரியாக துபாயில் நடக்கும் திருமண விழாவில், பலபேர் முன்னிலையில் ஸ்ரீதேவி மயங்கி விழுந்து இறக்கும் வகையில் திட்டமிட்டு தந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

Sridevi

ஆனால் பாடி கண்டிசன் காரணமாக, ஸ்ரீதேவி ஓட்டலுக்கு திரும்பிய நிலையில் பாத்ரூமில் இருந்த போது விஷம் வேலைசெய்து இறந்துள்ளதாகவும் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதில் ஸ்ரீதேவியின் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டையும் அவர் தெரிவித்திருக்கிறார் என, இந்த தகவலை சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago