Categories: CINEMA

இதுவரை மர்மம் விலகாத நடிகை ஸ்ரீதேவியின் மரணம்.. பல வருடம் கழித்து பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்..

நடிகை ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக தமிழ் படங்களில் அறிமுகமாகி பின் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் கதாநாயகியானார். ரஜினி, கமல் என 1980களில் நடித்து, தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் இந்திக்கு போன ஸ்ரீதேவி அனில் கபூருடன் அதிக படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அனில் கபூரின் அண்ணன் போனி கபூரையே திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் துபாயில் நடந்த தனது இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்ற அவர், ஓட்டலில் தங்கியிருந்த போது அங்கிருந்த பாத்ரூமில் பாத்டப்பில் இறந்து கிடந்தார்.

Sridevi

இதையடுத்து அவரது மரணம் மர்மமாக பேசப்பட்டது. இயற்கையாக அவர் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தது. துபாய் போலீசார் விசாரணை நடத்தி, ஸ்ரீதேவி இறப்பு தற்செயலானது என அந்த வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், ஸ்ரீதேவி விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக ஒரு பயங்கர தகவல் இப்போது வைரலாகி வருகிறது. ஸ்ரீதேவியின் தீவிர ரசிகையான தீப்தி பென்னட்டி என்பவர், ஸ்ரீதேவியின் தீவிர ரசிகை. ஈவென்ட் மேனஜராக இருக்கும் அவர் ஸ்ரீதேவி இறப்பதற்கு ஒரு வாரம் முன் உத்தரபிரேதசம் லக்னோவில் சந்தித்து பேசி இருக்கிறார். அவர் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் ஸ்ரீதேவி சம்மதித்து இருக்கிறார். இந்நிலையில் அவர் மர்மமாக இறந்துள்ளார்.

Sridevi

துபாயில் உள்ள டிடெக்டிவ் ஏஜண்டுகளை வைத்து, போலீசார் விசாரணை, பத்திரிகைகளில் வெளியான தகவல்களில் அடிப்படையில் ஒரு பெண் துப்பறிவாளராக மாறி, தீப்தி பென்னட்டி பல விசாரணைகளை நடத்தி துப்பறிந்திருக்கிறார். இதில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகளை செயலிழக்க வைக்கும் பாம்பு விஷத்தை பால் போன்ற ஏதோ ஒரு பொருளில் கலந்து ஸ்ரீதேவி கொடுக்கப்பட்டுள்ளது. அது சரியாக துபாயில் நடக்கும் திருமண விழாவில், பலபேர் முன்னிலையில் ஸ்ரீதேவி மயங்கி விழுந்து இறக்கும் வகையில் திட்டமிட்டு தந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

Sridevi

ஆனால் பாடி கண்டிசன் காரணமாக, ஸ்ரீதேவி ஓட்டலுக்கு திரும்பிய நிலையில் பாத்ரூமில் இருந்த போது விஷம் வேலைசெய்து இறந்துள்ளதாகவும் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதில் ஸ்ரீதேவியின் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டையும் அவர் தெரிவித்திருக்கிறார் என, இந்த தகவலை சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

Sumathi
Sumathi

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

3 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

18 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

18 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

20 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

20 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

23 hours ago