நடிகை ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக தமிழ் படங்களில் அறிமுகமாகி பின் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் கதாநாயகியானார். ரஜினி, கமல் என 1980களில் நடித்து, தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் இந்திக்கு போன ஸ்ரீதேவி அனில் கபூருடன் அதிக படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அனில் கபூரின் அண்ணன் போனி கபூரையே திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் துபாயில் நடந்த தனது இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்ற அவர், ஓட்டலில் தங்கியிருந்த போது அங்கிருந்த பாத்ரூமில் பாத்டப்பில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து அவரது மரணம் மர்மமாக பேசப்பட்டது. இயற்கையாக அவர் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தது. துபாய் போலீசார் விசாரணை நடத்தி, ஸ்ரீதேவி இறப்பு தற்செயலானது என அந்த வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், ஸ்ரீதேவி விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக ஒரு பயங்கர தகவல் இப்போது வைரலாகி வருகிறது. ஸ்ரீதேவியின் தீவிர ரசிகையான தீப்தி பென்னட்டி என்பவர், ஸ்ரீதேவியின் தீவிர ரசிகை. ஈவென்ட் மேனஜராக இருக்கும் அவர் ஸ்ரீதேவி இறப்பதற்கு ஒரு வாரம் முன் உத்தரபிரேதசம் லக்னோவில் சந்தித்து பேசி இருக்கிறார். அவர் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் ஸ்ரீதேவி சம்மதித்து இருக்கிறார். இந்நிலையில் அவர் மர்மமாக இறந்துள்ளார்.
துபாயில் உள்ள டிடெக்டிவ் ஏஜண்டுகளை வைத்து, போலீசார் விசாரணை, பத்திரிகைகளில் வெளியான தகவல்களில் அடிப்படையில் ஒரு பெண் துப்பறிவாளராக மாறி, தீப்தி பென்னட்டி பல விசாரணைகளை நடத்தி துப்பறிந்திருக்கிறார். இதில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகளை செயலிழக்க வைக்கும் பாம்பு விஷத்தை பால் போன்ற ஏதோ ஒரு பொருளில் கலந்து ஸ்ரீதேவி கொடுக்கப்பட்டுள்ளது. அது சரியாக துபாயில் நடக்கும் திருமண விழாவில், பலபேர் முன்னிலையில் ஸ்ரீதேவி மயங்கி விழுந்து இறக்கும் வகையில் திட்டமிட்டு தந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால் பாடி கண்டிசன் காரணமாக, ஸ்ரீதேவி ஓட்டலுக்கு திரும்பிய நிலையில் பாத்ரூமில் இருந்த போது விஷம் வேலைசெய்து இறந்துள்ளதாகவும் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதில் ஸ்ரீதேவியின் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டையும் அவர் தெரிவித்திருக்கிறார் என, இந்த தகவலை சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.