CINEMA
நடிகை சரண்யா மோகனா இது?… இன்னும் குறையாத அதே அழகு… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் திரையுலகில் ‘காதலுக்கு மரியாதை’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தனுஷ் உடன் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்து கலக்கியுள்ளார்.இதைத் தொடர்ந்து அவர் வினய் நடித்த ‘ஜெயம் கொண்டான்’ திரைப்படத்தில் நடித்தார்.
இவர் குறிப்பாக தளபதி விஜய் உடன் நடித்த ‘வேலாயுதம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் நடிகை சரண்யா மோகன் தனது நீண்ட நாள் காதலர் ஆன டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு அனந்த பத்மநாபன் என்ற மகனும் அன்னபூர்ணா என்ற மகளும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சரண்யா மோகன். இவர் அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது தனது முழு குடும்பத்துடன் மூகாம்பிகா கோவிலுக்கு சென்ற அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை சரண்யா மோகனா இது? ‘ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வைரலாக்கியும் வருகின்றனர்.