CINEMA
சினிமாவை தாண்டி சத்தமே இல்லாமல், சமந்தா இப்படி ஒரு வேலை பாக்குறாங்களா?… அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இயக்குனர் கௌதம் என நீ இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் தற்போது சமந்தா களம் இறங்கியுள்ள நிலையில் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது. அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க பிசியான நடிகையாக மாறிவிட்டார். புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு சமந்தா நடித்துள்ளார்.
இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் சமந்தா சத்தம் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் இன்னொரு வேலையையும் செய்து வருகிறார். அதாவது சமந்தா இ காம் என்ற ஒரு மழலையர் பள்ளியை நடத்தி வருகிறார்.
இது குறித்து இதுவரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அடிக்கடி அந்த பள்ளிக்குச் செல்லும் சமந்தா அங்கிருக்கும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். அதன்படி நேற்று அந்தப் பள்ளியில் sports day நடைபெற்றதால் அங்கு சமந்தா சென்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருந்த தருணத்தையும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமந்தா வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் சமந்தாவின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க