Connect with us

CINEMA

நடிகை சமந்தா அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட பூக்கள் தான் காரணமா..? அவர் வெளியிட்டபதிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ..

நடிகை சமந்தா பூக்கள் என்றால் யாருக்கு அலர்ஜி என்ற பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ்,  தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில்  நடிப்பதன் மூலம் இந்திய அளவில் பிரபல நடிகையாக இருப்பவர்  நடிகை சமந்தா.இவர் சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அறிய வகை தசை, மற்றும் தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்திருந்தார்.

   

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏர்ப்படுத்தியிருந்தது. பின்னர் அவர் தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.இந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக  அவர் அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு செல்ல உள்ளதால்  ஒரு ஆண்டு சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சமந்தா ஆயுர்வேதா சிகிச்சையும் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களான யசோதா மற்றும் சகுந்தலம் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.அதனை தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு விஜய் தேவர்கோண்டவுடன் குஷி படத்திலும் நடித்திருந்தார்.இவர் பிசியாக இருக்கும் நிலையிலும் அவ்வப்போது தனது உடல் நிலை குறித்த தகவலை சமூக வலைதளங்களில் வெளிடிட்டு வந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா அவரது சமூக வலைதள பக்கத்தில்  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில அழகான விஷயங்களை பார்க்கும்  போது நம் மனதுக்குள் கலவையான எண்ணங்கள் தோன்றும் .அதற்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது என்பது மிகவும் வருத்தமானது  என்றும் , யாருக்கு பூக்கள் என்றால் அலர்ஜி ? என பதிவிட்டுள்ளார்.இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top