Categories: சினிமா

அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டார்.. 2 கோடி பணம் கேட்டு மிரட்டுகிறார்.. நடிகை பார்வதி நாயரின் பதிவு வைரல்..!!

Spread the love

நடிகை பார்வதி நாயர் தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பார்வதி நாயர் வீட்டில் 18 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. இது குறித்து பார்வதி நாயர் அளித்த புகாரி அடிப்படையில் சுபாஷ் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சுபாஷ் என்பவர் தயாரிப்பு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்க்கிறார். மேலும் பார்வதி நாயரின் போட்டோ ஷூட்டுக்கும் உதவி செய்துள்ளார்.

 

மேலும் வீட்டு வேலைகள் செய்யவும் பார்வதி நாயருக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பார்வதி நாயர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கூறியதாவது, வழக்கில் சுபாஷின் பெயர் சேர்க்கப்பட்டவுடன் அதனை அகற்றுமாறு என்னை மிரட்டினார். தயாரிப்பு நிறுவனத்தினர் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டனர். எனது அனுமதி இல்லாமல் அந்தரங்க புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அது பற்றியும் புகார் அளித்ததால் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.

 

சுபாஷ் என்னை பற்றி தவறாக பேசியதால் சுபாஷ் தரப்பில் பரப்பப்படும் செய்திகளை வெளியிட நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கினேன். அதனை மீறி சுபாஷ் என் மீது அவதூறு பரப்பினார்.இந்த நிலையில் சுபாஷ் கற்பினர் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மெரட்டி வழக்கை வாபஸ் வருமாறு கூறுகின்றனர். நான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன் இரு தரப்பையும் பேசி சமாதானம் செய்யுமாறு நீதிமன்றம் கூறியது.

ஆனால் சுபாஷ் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் எனது படம் ரிலீஸ் ஆனது அதேவேளையில் என் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அப்போதும் பணம் கேட்டு சுபாஷ் சென்னை மிரட்டினார். என்னை பற்றி தவறாக இண்டர்வியூவில் பேசி வருகிறார். எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசி கொலை மிரட்டல் விடுகிறார்.

எனது பெற்றோர் வெளிநாட்டில் இருக்கின்றனர். நான் சென்னையில் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு சுபாஷ் இப்படி பல தொந்தரவு கொடுக்கிறார். இது எனது மனம் மற்றும் உடலை பாதிக்கிறது. எனது வாழ்க்கையை எதிர்காலம், புகழ் ஆகியவற்றிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது. பொதுமக்கள் உண்மை என்ன என்பதை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நீதி கட்டாயம் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

admin

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

14 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

22 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

28 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

40 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

58 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

1 மணத்தியாலம் ago