Connect with us

CINEMA

சத்தமில்லாமல் திடீரென நிச்சயதார்த்தத்தை முடித்த ‘அய்யனார்’ பட நடிகை… வெளியான புகைப்படங்கள்… குவியும் வாழ்த்துக்கள்…

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீரா நந்தன். இவர் பாடகி, சின்னத்திரை நட்சத்திரம் என பன்முகங்களில் வலம் வந்து கொண்டுள்ளார்.  இதனைத்தவிர்த்து, தமிழ், தெலுங்கு, கன்னடா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

   

கேரளாவில் உள்ள கொச்சி நகரில் பிறந்த நடிகை மீரா நந்தன், Mass Communication with Journalism பயின்றுள்ளார்.

நடிகர் மோகன் லாலுடன் கடந்த 2007 ஆம் வருடம் விளம்பரம் வாயிலாக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த மீரா, பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மீரா தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி இருக்கிறார். பிளாக் பாரஸ்ட் என்ற படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்து, தேசிய அளவிலான விருதையும் தன்வசப்படுத்தினார்.

இதுமட்டுமல்லாது, மலையாள திரையுலகில் நடிகை டாப்ஸியின் பின்னணி குரல் பதிவாளராகவும் மீரா நந்தன் இருந்து வருகிறார்.

முல்லா என்ற மலையாள திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமான நடிகை மீரா, தமிழில் வால்மீகி படத்தில் அறிமுகமாகினர்.

அதனையடுத்து, மலையாளம், கன்னடா, தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூரிய நகரம், சண்டமாருதம்,

நேர்முகம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், அவை பெரியளவில் வெற்றி பெறவில்லை என்பதால், அவர் தமிழ் திரையுலகில் அறியப்படாத நடிகையாக இருக்கிறார்.

சமீப காலமாக மீரா நந்தன் தாராளமான கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருந்தார். அது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் அவர் அதற்கு பதிலடியும் கொடுத்து இருந்தார்.


இந்நிலையில் தற்போது மீரா நந்தன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.

லண்டனை சேர்ந்த ஸ்ரீஜு என்பவருடன் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. இது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தான் என கூறப்படுகிறது.

இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top