Connect with us

CINEMA

பல வருடங்களாக பணியாற்றிய மேனேஜரை விரட்டியடித்த ஜோதிகா.. மும்பையில் குடும்பத்துடன் குடியேறியது ஏன்..?

நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோருக்கு மேனேஜராக பல ஆண்டுகள் இருந்தவர் தங்கதுரை. இவர்களிடம் வருவதற்கு முன் நடிகை நயன்தாராவின் மேனேஜராகவும் சிலகாலம் தங்கதுரை பணிபுரிந்தவர் என்று கூறப்படுகிறது. துவக்கத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்த தங்கதுரை, அதன்பின் தான் சினிமா துறைக்கு வந்து மேனேஜராக இருந்திருக்கிறார். ஜோதிகா, சூர்யா வளர்ச்சியில் தங்கதுரைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். அதே வேளையில் மிகச் சரியாக சூர்யா, ஜோதிகா, கார்த்தி பட கால்ஷீட்டுகளை கவனித்துக்கொள்வார். சம்பள பாக்கி விவகாரங்களை எல்லாம் சுமூகமாக டீல் செய்வார்.

   

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன், திடீரென தங்கதுரையை மேனேஜர் பொறுப்பில் இருந்து சூர்யா விலகிச் செல்லுமாறு கூறிவிட்டார். பருத்திவீரன் தயாரிப்பு சர்ச்சையில் பல விஷயங்களை, விவகாரங்களை வெளியில் சொல்லி குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதே தங்கதுரை தான் என சூர்யாவிடம் சொல்லி இருக்கிறார் ஜோதிகா. இதையடுத்து அவரை வெளியேற்றி விட்டது சூர்யா குடும்பம். அத்துடன் ஜோதிகா தன் குடும்பத்துடன் மும்பையில் குடியேறிவிட்டார்.

தன் பெற்றோரை விட்டு பிரிந்து, மனைவி பிள்ளைகளுடன் மும்பையில் தனியாக ஒரு பங்களாவில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. அவருக்கு இந்தி பட வாய்ப்புகளை தேடித்தந்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் சூர்யா. அதே போல் மும்பையில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் பறந்து வந்து மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த காதல் தி கோர் படமும் சக்சஸ் ஆகி விட்டது.

குழந்தைகள் படிப்புக்காக, என் வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ள என மும்பையில் குடியேறியதற்கு ஜோதிகா காரணங்கள் சொன்னாலும், மீண்டும் தன்னை நடிக்க சிவக்குமார் அனுமதிக்க மாட்டார் என்பதால்தான், மும்பைக்கு ஜோதிகா திட்டமிட்டு சூர்யா, பிள்ளைகளுடன் குடியேறி இருக்கிறார் என்று, நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top