CINEMA
70 வயது நடிகருடன் நெருக்கமாக நடிகை ஜோதிகா… தளபதி 68-க்கு நோ சொன்னது இதுக்காகத்தானா ஜோ..?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் இரண்டு பிள்ளைகள் இருப்பது நாம் அறிந்த ஒன்றே. இதை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் மம்முட்டி. தனது வித்தியாசமான படங்களாலும், விடாமுயற்சியாலும் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இன்றும் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது நடிகை ஜோதிகா முதல் முறையாக மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘காதல் தி கோர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குனர் ஜோ பேபி படத்தை இயக்கியுள்ளார் .இந்த படத்திற்கு மேத்யூ புலிகன் என்பவர் இசையமைத்துள்ளார்.
நடிகர் மம்முட்டி தனது சொந்த நிறுவனத்தின் மூலம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். தற்பொழுது படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதற்கிடையே இயக்குனர் வெங்கட் பிரபு நடிகை ஜோதிகாவை தளபதி 68 ல் நடிக்க அழைத்ததாகவும், அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ‘காதல் தி கோர்’ திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில் அவர் ‘காதல் தி கோர் என் டைட்டிலுக்கு அர்த்தம் ஏற்படுத்தும் வகையில் படம் உண்மையாகவும், நன்றாகவும் என் மனதுக்கு மிகவும் பிடித்த வகையில் வந்திருக்கிறது. என்றும், லெஜெண்ட் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் செய்த புண்ணியம் என்றும், படப்பிடிப்பு சமயத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்’ என்றும் கூறியுள்ளார். இதோ அவரின் பதிவு…
View this post on Instagram