#image_title
சத்யராஜ் நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு மாமன் மகள் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். மேலும் கவுண்டமணி, மனோரமா, பிரபல நடிகை ஜெயசித்ரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் சத்யராஜ், மணிவண்ணன், கவுண்டமணி, ஜெயசித்ரா ஆகியோர் இணைந்து நடிக்கும் ஒரு சீன் வரும்.
அந்த சீனில் ஏற்கனவே ராஜலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த ஜெயசித்ராவுக்கு உண்மை தெரிந்ததால் கவுண்டமணி ரீல் அறிந்து போச்சு என்ற வசனத்தை பேசுவார். அந்த காட்சிகள் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. சமீபத்தில் நடிகை ஜெயசித்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது, மாமன் மகள் திரைப்படத்தில் ரீல் அறுந்து போச்சு சீனை எடுக்கும்போதே நாங்கள் சிரித்தோம்.
மேனேஜர் எனக்கு கால் பண்ணி அடுத்த நாள் ஷூட்டிங் இருக்குன்னு சொன்னார். அப்போது நான் லண்டனில் இருந்தேன். நான் லண்டனில் இருந்தது யாருக்கும் தெரியாது. சத்யராஜ் பச்சை நிற புடவையில் என்னை பார்த்து மீனாட்சி மாறி இருக்கீங்க என கூறுவார். ஷூட்டிங்கிற்காக லண்டனில் இருந்து புறப்பட்டு வந்தேன். அவர்கள் செய்யும் லூட்டிகளை மறந்து விட்டு சீனில் நடிக்க வேண்டும். படத்தை தியேட்டரில் பார்க்கும்போது அப்படி சிரிப்பு வரும்.
மாமன் மகள் திரைப்படத்தை மிகவும் ரசித்து நடித்தேன். கவுண்டமணி கடந்த வாரம் கூட என்னை பார்த்தார். அவர் மீண்டும் எப்போது நடிக்கிறீர்கள் என்று கூட என்னிடம் கேட்டார். நாங்கள் ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்தை ரசித்து நடிப்போம். மாமன் மகன் படத்தில் நடிக்கும் போது நடந்த சம்பவங்களை என்னால் மறக்கவே முடியாது என தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…