தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் ‘தொட்டால் சிணுங்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தனது குடும்ப பாங்கான முகத்தோற்றத்தாலும், தனது நடிப்பு திறமையாலும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களது காதலை வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. 2001ல் வீட்டை எதிர்த்து இவர்களது காதல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு தற்போது இனியா, பிரியங்கா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
வெள்ளிதிரையில் பட வாய்ப்புகள் குறையவே, இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் மிகப்பெரிய ஹிட் எடுத்தது. இதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து மிகப் பிரபலமானார் தேவயானி.சில வருடங்கள் சின்ன திரையை விட்டு விலகிய இவர், ‘புது புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கினார். தற்பொழுது வரை பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார் தேவயானி.
இந்நிலையில், 49 வயதாகும் நடிகை தேவயானி தனது முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட நேரத்தில் உணவு சாப்பிடுவாராம். Fast Foods அனைத்தையும் தவிர்த்துவிட்டு, அதிக காய்கறிகள் கொண்ட உணவு தான் சாப்பிடுவாராம். உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாம். அதிகளவு தேங்காய் எண்ணெய்யை தனது முகத்தில் பயன்படுத்துவாராம்.
அது தான் அவருடைய முகத்தின் பளபளப்பிற்கு காரணம் என்கின்றார். மேலும், தேவையில்லாத பொருட்களை முகத்தில் பயன்படுத்தமாட்டாராம். ஒரே ஒரு சோப் மற்றும் நீண்ட காலமாக ஓரே ஸ்கின் கேர் தான் பயன்படுத்தி வருகிறாராம். இதுமட்டுமின்றி தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தேய்த்தபின் தான் குளிப்பாராம். இவை தான் அவருடைய உடல் ஆரோக்கியம் மற்றும் முகம் பளபளப்பாக இருக்க காரணம் என்று நடிகை தேவயானி கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…
குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் விவகாரம்…