Categories: சினிமா

அடக்கொடுமையே..! சமந்தா, பகத் பாஸிலை தொடர்ந்து.. அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிம்பு பட நடிகை..!

Spread the love

சமந்தா, பகத் பாஸில் ஆகியோரை தொடர்ந்து அரிய வியாதியால் சிம்பு பட நடிகையான அடா சர்மா பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அறிமுகமானவர் அடா சர்மா. இதற்கு முன்னதாக ஹிந்தியில் பிரபல நடிகையாக கலக்கி வந்த இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியில் 1920, பீர், ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில படங்களிலும் நடித்து இருக்கின்றார்.

மேலும் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த பரபரப்புக்கு உள்ளனர். இந்நிலையில் நடிகை அடா சர்மா அரிய வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்து இருக்கின்றார்.

இது குறித்து அவர் கூறும் போது எனக்கு எண்டோ மெட்ரியோசீஸ் என்ற அரியவகை வியாதியால் அவதிப்பட்டு வருவதாக கூறியிருக்கின்றார். இதனால் தனது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்திருந்தார். கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் ஒல்லியாக இருந்தேன்.

அதைத் தொடர்ந்து மற்றொரு படத்திற்கு உடல் எடையை கூட்ட வேண்டும் என்று என்னை அதிகம் சாப்பிட சொன்னார்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒரு டஜன் வாழைப்பழங்களை சாப்பிட்டேன். தூங்குவதற்கு முன்பு லட்டு சாப்பிட்டேன். இதனால் எனது உடல் தோற்றம் சற்று மாறி உள்ளது. மேலும் அரிய வியாதியும் வந்திருக்கின்றது. இதன் காரணமாக இடுப்பு வலி ஏற்பட்டு நரக வேதனையை அனுபவித்து வருகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

ஏற்கனவே சினிமாவில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பகத் பாஸிலும் ஒரு அரிய வியாதியால் அவதிப்பட்டு வருவதாக சமீபத்தில் தான் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை அடா சர்மாவும் இது போன்ற ஒரு நோயில் சிக்கி இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mahalakshmi

Recent Posts

கள்ளக்காதலி கிடைக்காத ஆத்திரத்தில்… பிஞ்சுக் கழுத்தை அறுத்த சைக்கோ காதலன்… நீல நிற டிரம்முக்குள் இருந்த கோரக் காட்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…

7 minutes ago

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

14 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

18 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

27 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

52 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

60 minutes ago