#image_title
கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சிவகார்த்திகேயன் உடனான ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றார். அது என்ன படம் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமலஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான நடிகை ஸ்ருதிஹாசன் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய புகழைப் பெற்றார். அதன் பிறகு தமிழ் மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் சூர்யா, அஜித், விஜய், விஷால் உள்ளிட நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சலார் திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. அப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலை இசையமைத்து வெளியிட்டார். இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன்.
தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த இவருக்கு தற்போது ஒரு படம் கூட கைவசம் இல்லை. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சிவகார்த்திகேயனுடன் நடிக்க வந்த வாய்ப்பு ஒன்றை வேண்டாம் என்று மறுத்து இருக்கின்றார். அது என்ன படம் என்றால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ திரைப்படம் தான்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் தான் ரெமோ. இந்த திரைப்படத்தில் முதலில் நடிப்பதற்கு ஸ்ருதிஹாசனைதான் அணுகினார்களாம். ஆனால் அந்த சமயத்தில் அவர் முன்னணி நடிகர்களின் படங்களின் பிசியாக நடித்து வந்த காரணத்தினால் அந்த வாய்ப்பையும் மறுத்து இருக்கின்றார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. இந்த படத்தை நடிகை ஸ்ருதிஹாசன் மிஸ் பண்ணி விட்டார் என்று பலரும் கூறி வந்தார்கள்.
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…