நடிகர் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2024ல் தீபாவளிக்கு வெளியானது. அதன்பிறகு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீரதீர சூரன் 2 படம் 2025 மார்ச் மாதம் வெளியானது. இந்த 2 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு எந்த படத்திலும் விக்ரம் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு முக்கியமான பதிவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் அந்த பதிவில் கூறியிருப்பதாவது, சில நேரங்களில் மௌனம் என்பது தன்னை தயாரித்து கொள்வது தான். என்னை ஈர்க்கும் கதைகளுக்காக காத்திருந்தேன். தற்போது நான் பெரிதும் மதிக்கும் 4 இயக்குனர்களுடன் புதிய படங்களை துவங்குவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்யாசமானவை என்று நடிகர் விக்ரம் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்தடுத்த படங்களை போடி ராஜ்குமார், விஷ்ணு எடவன், இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்குகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…