தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன.
ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
இப்படியான நிலையில் விஜயகாந்த் பிரபல நடிகர் ராதாரவிக்கு செய்த மிகப்பெரிய உதவி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகளான ராதாரவி தனது தந்தை மறைந்த பிறகு அவருக்காக ஒரு திரு உருவ சிலையை நிறுவ வேண்டும் என்று நினைத்துள்ளார். அதற்கான பணிகள் எல்லாம் தொடங்கி சிலை நிறுவும் பணி முடியும் தருவாயில் இருந்தது. அந்த சமயத்தில் மேலும் 30 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்ட நிலையில் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தார்.
அப்போது தனது நெருங்கிய நண்பர் கேப்டன் விஜயகாந்த்திடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது எதைப் பற்றியும் யோசிக்காத விஜயகாந்த் தன்னுடைய நண்பர் ராதாரவி தன்னிடம் பணம் கேட்கவில்லை என்றாலும் முப்பதாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அன்றைக்கு இந்த பணத்தின் மதிப்பு என்பது பெரிய தொகையாக தான் இருந்தது. படம் ஆண்டுகள் கழித்தும் அந்த பணத்தை விஜயகாந்த் திரும்ப கேட்கவே இல்லை. அதன் பிறகு விஜயகாந்த் தயாரித்த உழவன் மகன் திரைப்படத்தின் நடிகர் ராதாரவி நடிப்பதற்கு 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் இறுதியாக அவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் நெகிழ்ந்து போன ராதாரவி விஜயகாந்தை பார்த்து நான் உனக்கு தர வேண்டிய 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொள் என்று கூறினார். உடனே விஜயகாந்த் நீ எனக்கு பணத்தை திருப்பி தருவாய் என்று நான் உனக்கு அந்த பணத்தை தரவில்லை. நான் அது உன்னுடைய தந்தைக்கு செய்யும் மரியாதை என்று விஜயகாந்த் கூறியதும் ஒரு நிமிடம் ராதா ரவி கண்கலங்கி விட்டாராம். இப்படி விஜயகாந்த் தெரிந்தும் தெரியாமலும் பலருக்கும் செய்த உதவிகள் ஏராளம்
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…