தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. 1997 ஆம் ஆண்டு வெளியான கங்கோத்ரி என்ற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு வெளியான காதலே நிம்மதி படம் மூலமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் இவர் பிஸியாக நடித்து வந்தார். குறிப்பாக உயிர், தனம் மற்றும் நேபாளி என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.
நடிகை சங்கீதாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் தான் பிதாமகன். பாலா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது மட்டுமல்லாமல் சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்தது. சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வரும் சங்கீதா சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக செயல்பட்டு வந்தார்.
அது மட்டுமல்லாமல் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்காக இவர் தொகுத்து வழங்கினார். தற்போதும் சங்கீதா ஒரு சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார். இப்படியான நிலையில் சங்கீதா தனது மகளுடன் சேர்ந்து நடனமாடிய ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…