கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா சற்று பின்னடைவை நோக்கி செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் பெரிய ஹீரோக்களின் படங்கள் பெரிய பட்ஜெட்டில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு ஹிட் கொடுக்காமல் தோல்வியை தழுவுகிறது. ஆனால் சிறிய பட்ஜெட்டில் வெளியாக கூடிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நடிகர்களும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களும் பலவித முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இப்படியான நிலையில் தமிழ் சினிமா அழிவுக்கு நீங்க காரணம் ஆயிடாதீங்க என்று சில நடிகர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் என்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அஜித், ரஜினி மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம்தான் நடிக்கிறார்கள். அது அவர்களுடைய விருப்பம் தான். இதில் நாம் எதுவும் கருத்து சொல்ல முடியாது.
டெக்னாலஜியை இல்லாத காலத்தில் அதாவது ரஜினி கமல் காலத்திலும் சரி, அதற்கு முன்பு எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலத்திலும் சரி வருடத்திற்கு ஒரு ஹீரோ நடிப்பில் 10 படங்கள் கூட வெளியானது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு கூட அஜித் மற்றும் விஜய் காலத்திலும் வருடத்திற்கு நிறைய படங்கள் வெளியாகின. ஆனால் இன்று டெக்னாலஜி வளர்ந்த போதும் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள்தான் வெளியாகிறது. அன்று நடிகர்களின் படங்கள் பார்ப்பதற்காகவே மக்கள் வரிசையாக திரையரங்கிற்கு வந்து கொண்டிருந்தனர். இன்று ஒரு நடிகர் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறைதான் ஒரு படத்தில் நடிக்கிறார்.
அன்று டெக்னாலஜியே இல்லாத காலத்தில் பல வேலை ஆட்களை வைத்து ரொம்ப கஷ்டப்பட்டு வருடத்திற்கு 10 முதல் 15 படங்கள் எடுத்தாங்க. ஆனா இன்னைக்கு நிறைய டெக்னாலஜி இருந்தும் தங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைத்தால் மட்டும் போதும் என்று நடிகர்கள் ஜாலியா இருக்காங்க. இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு 20 படங்கள் கூட தாராளமா நடிக்கலாம்.
அப்படி உங்களால் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும். இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் , சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் வருடத்திற்கு இரண்டு படங்கள் ஆவது நடிங்கள். இன்று மாதவன் அவரை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவை விட்டுவிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நடிக்க போய்விட்டார். இப்படியே எல்லோரும் சென்று விட்டால் தமிழ் சினிமாவின் அழிவுக்கு அதுவே காரணமாகிவிடும். உங்களை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் வேலை செய்யுங்கள் என்று திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…