Connect with us

CINEMA

வெள்ளக்காடாக மாறிய ‘சென்னை’… சூர்யா, கார்த்தி, விஷ்ணு, சூரியை தொடர்ந்து ‘வைகைப்புயல்’ வடிவேலு செய்த நெகிழ்ச்சி செயல்.. 

தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்துள்ளது.  இதனால்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

   

தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு  நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ரூ. 10 லட்சம், நடிகர் விஷ்ணு ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம்,  நடிகர் சூரி ரூ. 10 லட்சம் என வெள்ள நிவாரண நிதி கொடுத்தனர்.

#image_title

இவர்களைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து  6 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். இது குறித்து உதயநிதி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு அவருக்கு நன்றியும் தெரிவித்த்துள்ளார். இதோ அந்த பதிவு..

Continue Reading

More in CINEMA

To Top