CINEMA
லியோ சக்ஸஸ் மீட்டுக்கு விஜய் மனைவி சங்கீதா வராததற்கு காரணம் திரிஷா தான் – பிரபலம் கூறிய பகீர் தகவல்…
சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் கடந்த 1ம் தேதி மாலை லியோ படத்தின் வெற்றிவிழா நடந்தது. இதில் விஜய், அவரது அம்மா ஷோபா சந்திரசேகர், நடிகை திரிஷா, நடிகர்கள் அர்ஜூன், கவுதம்மேனன், மன்சூர் அலிகான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். ஆனால், விஜய் மனைவி சங்கீதா, இந்த வெற்றிவிழாவில் பங்கேற்கவில்லை. ஆனால். கடந்தமுறை நடந்த விஜய் பங்கேற்ற இதுபோன்ற விழாக்களில், சங்கீதா தவறால் கலந்திருக்கிறார். விஜய் அருகிலேயே அமர்ந்து நிகழ்ச்சியை ரசிப்பார். ஆனால் இந்த முறை விஜய் அருகில் அமர்ந்திருந்தது நடிகை திரிஷா தான்.
இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, நடிகை சங்கீதா பேச்சை மீறி லியோ படத்தில் திரிஷாவுடன் விஜய் நடித்ததே வில்லங்கமான விஷயம். இதில் லிப்லாக் தந்ததெல்லாம் குடும்பத்தில் பயங்கர பிரச்னையை ஏற்படுத்தி இருக்கும். திரிஷா வந்தால், லியோ வெற்றிவிழாவுக்கு நான் வரமாட்டேன் என்று சங்கீதா கூறி இருக்கிறார். திரிஷா வந்த காரணத்தால், லியோ விழாவுக்கு விஜய் மனைவி சங்கீதா வரவில்லை. ஆனால், மகன் என்ற முறையில் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் கலந்துக்கொண்டார்.
மனைவி, குடும்பம் பிரச்னைகளை சரிசெய்ய முடியாத விஜய், நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார் எனத் தெரியவில்லை. வெளிநாடு செல்லும்போது, மனைவி சங்கீதாவை பார்க்க விஜய் சென்றால், அவரை பார்க்க சங்கீதா மறுத்துவிடுகிறார் என்ற தகவலும் உள்ளது. இந்த கருத்துவேறுபாடு இன்னும் அதிகரித்தால், எதிர்காலத்தில் பாதிப்பு அதிகமாகும். அரசியலுக்கு வருவதாக கூறும் விஜய், மனைவியுடன் சேர்ந்தால் மட்டுமே பெண்களின் ஓட்டு கிடைக்கும். வயது வந்த மகன், மகளுக்கு தந்தையாக இருக்கும் விஜய், இப்படி லிப்லாக் காட்சியில் நடித்தால், மகனின் நண்பர்கள், மகளின் தோழிகள் இதுபற்றி அவர்களிடம் கேட்டால், மகனும், மகளும் சங்கடப்படுவார்களே, என்று கூட நினைக்கவில்லை என்று கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.