Connect with us

CINEMA

நடிக்க வருவதற்கு முன்பு பஸ் கண்டக்டர் இல்ல, அதற்கு முன்னாடி ரஜினி இப்படி ஒரு வேலை செய்தாரா?.. அதுவும் 2 ரூபாய் சம்பளத்திற்கு..!!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் ரஜினி முதலில் பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்தார். தனது நண்பர்களுடன் நாடகங்களை பார்க்க போன அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒருமுறை நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் துரியோதனன் வேடத்தில் நடித்த போது ரசிகர்களிடமிருந்து அவருக்கு கைதட்டல் கிடைத்தது. உடனே ரஜினியின் நண்பர் பகதூர் நீ சென்னை போய் நடிப்பு கல்லூரியில் படித்துவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சி செய் என்று கூறி செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

   

அப்படி சென்னைக்கு வந்த ரஜினியை ஒருமுறை பாலசந்தர் கல்லூரியில் சந்தித்த நிலையில் அவர் இயக்கி வந்த அபூர்வராகங்கள் படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக ரஜினியை நடிக்க வைத்தார். அதன் பிறகு அடுத்தடுத்து ரஜினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு ரஜினி பைரவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்தடுத்து இவரின் படங்கள் அனைத்தும் நல்ல வசூலை பெற்ற நிலையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் இவருக்கு கிடைத்தது. ஆனால் ரஜினி 16 வயதிலேயே படத்துக்கு 3000 ரூபாய் சம்பளத்திற்கு மட்டுமே பேசப்பட்டுள்ளார்.

அதன் பிறகு பல படங்களுக்கும் சில ஆயிரங்கள் மட்டுமே இவருக்கு கிடைத்தது. பிரியா படத்தில் நடிக்கும் போது 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் கேட்ட நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் ரஜினிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளார். ரஜினி ஒரு லட்சம் சம்பளமாக வாங்கிய முதல் திரைப்படம் பிரியா. அதன் பிறகு லட்சங்கள் அதிகரித்து கோடியில் சம்பளம் வாங்கினார். தற்போது 100 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். ஆனால் பேருந்தில் வேலை செய்வதற்கு முன்பு ஒரு கன்னட பத்திரிக்கையில் பிழை திருத்தும் வேலையை ரஜினி செய்து வந்தார்.

அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் தினமும் இரண்டு ரூபாய் மட்டுமே. அதாவது மாதத்திற்கு 60 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அப்படி வாங்கிய சம்பளத்தையும் தன்னுடைய நண்பர்களுக்கு விருந்து வைப்பது மற்றும் படம் பார்ப்பது என ரஜினி ஜாலியாக இருந்துள்ளார். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினி தற்போது ஒரு நாளைக்கு இரண்டு கோடியை சம்பளமாக வாங்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top