நான் கொடுத்த செக்கை பிரகாஷ்ராஜ் தூக்கி எறிஞ்சிட்டார்.. ஒத்த ரூபா கூட வாங்கல.. பிரித்விராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

Spread the love

பிரித்விராஜ் மூத்த நடிகர்கள் சுகுமாரன் மற்றும் மல்லிகா ஆகியோரின் மகனாவார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்தியாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரித்விராஜ். 2002 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான பிரித்வராஜ் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

2006 ஆம் ஆண்டு பாக்யராஜ் அவர்களின் மகளான சரண்யா பாக்யராஜ் உடன் இணைந்து பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரித்திவிராஜ். சரண்யா பாக்யராஜ் நடித்த முதலும் கடைசிமான திரைப்படம் பாரிஜாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு ஜோதிகாவுடன் இணைந்து மொழி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தமிழ் சினிமாவில் பாராட்டுகளை பெற்றார் பிரித்விராஜ்.

தொடர்ந்து சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, ராவணன் சமீபத்தில் ஆடிஜிவிதம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். தென்னிந்தியாவில் மிகவும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ். தனது நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார் பிரித்திவிராஜ். தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் எம்புரான் படத்தை இயக்கியுள்ளார். மோகன்லால் நடித்து இருக்கும் இந்த படம் லூசிபர் படத்தின் 2ம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரித்விராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழில் நான் நடித்த படங்களில் திரும்பிப் பார்க்க விரும்பும் படமாக மொழி திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் ஒரு மாடர்ன் கிளாசிக். இந்த படத்தில் நான் நடிப்பதற்கு முக்கிய காரணம் பிரகாஷ்ராஜ் தான். அதேசமயம் இந்த திரைப்படத்தை பிரகாஷ் ராஜ் தான் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் கல்லூரி படிக்கும் நண்பர்கள் மாதிரி நெருக்கமாகி விட்டோம். அதன்பிறகு இருவரும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம்.

நான் தயாரித்த “9” படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கான சம்பளம் என்ன என்று கேட்டபோது படம் முடியட்டும் என்று சொல்லி படம் முழுவதும் நடித்தார். இறுதியாக டப்பிங் பேசும்போது கூட இப்போவாது சம்பளம் என்னன்னு சொல்லுங்க என்று கேட்டப்போ அவர் சொல்லவில்லை. பிறகு ஒரு கட்டத்தில் அவர் கிட்ட நான் செக் கொடுத்தேன். உடனே என்ன தைரியம் இருந்தா என்கிட்ட செக் கொடுப்பா என்று சொல்லி அதாவது தூக்கி போட்டுட்டாரு. என்னை எப்போதுமே அவர் வேறு ஒருவராக பார்த்தது கிடையாது என பிரித்விராஜ் பிரகாஷ்ராஜ் குறித்து பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

“மக்களுக்குத் தண்ணி கூட கொடுக்கல.. விஜய் தான் அந்த சம்பவத்திற்கு காரணம்”…. கரூரில் நடந்தது என்ன?… போட்டுடைத்த பாஜக தலைவர்…. பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…

2 minutes ago

FLASH NEWS: ஜிவி பிரகாஷுக்கு விழுந்த அடி… இசைஞானி இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!

இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…

6 minutes ago

உல்லாசப் பயணம்.. நள்ளிரவில் ரூமுக்குள் நுழைந்த பெண்…. கோவா சொகுசு லாட்ஜில் தொழிலதிபருக்கு நேர்ந்த பயங்கரம்… அம்பலமான பகீர் உண்மை….!

கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…

13 minutes ago

“திடீர் திருப்பம்”…. கடைசி நேரத்தில் செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி முடிவு…. அண்ணன் – தம்பி போட்ட ரகசிய ப்ளான்… அடுத்து நடக்கப்போவது என்ன…?

ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…

18 minutes ago

“எனக்கு வேண்டாம் அந்த நாற்காலி”…. தேடி வந்த ஆஃபரை நிராகரித்த திருமாவளவன்…. DCM விவாதத்திற்கு நடுவே பரபரப்பு..!

விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…

22 minutes ago

“டேய் ஆள மாத்தி கடத்திட்டீங்கடா…” கோவையில் அரங்கேறிய உள்ளத்தை அள்ளித்தா காமெடி…!

கோவையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சினிமா பாணியில் கடத்தப்பட்டு, பின்னர் கடத்தல் கும்பல் ஆளை மாற்றி கடத்தியதை உணர்ந்து அவரை…

23 minutes ago