Categories: சினிமா

தனியா ஒத்த பொம்பளையா போராடுற.. நீதி கிடைக்காவிட்டால் அவ்வளவுதான்.. திடீரென போராட்டத்தில் இறங்கிய நடிகை சோனா.!

Spread the love

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சோனா. அதன் பிறகு இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியான நடிகை கதாபாத்திரம் தான். தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார்.  இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையில் பல சவால்களை சந்தித்து வருகின்றார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டிகளை அதற்கு சான்றாக இருந்தது. பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஜோதிகாவின் தோழியாக வந்தாலும் அதற்கு அடுத்து கவர்ச்சி வேடங்களிலேயே நடித்தார். பிறகு அதே போன்ற கதாபாத்திரங்கள் தனக்கு வருவதால் படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டதாக தெரிவித்திருந்தார். சோனாவின் பெயருக்கு பின்னால் சர்ச்சைகளும் சொல்ல முடியாத பல ரகசியங்களும் உள்ளது. இப்படியான நிலையில் நடிகை சோனா இயக்கி நடித்துள்ள ஸ்மோக் வெப் தொடர் விரைவில் வெளியாகும் என்று அவரை தெரிவித்திருந்தார். அதில் தான் மலையாள சினிமாவில் நடித்த போது ஒரு நடிகர் தன்னுடைய காலில் விழுந்து கெஞ்சிய விஷயத்தையும் பகிர்ந்திருந்தார். இப்படியான நிலையில் ஸ்மோக் வெப் தொடர் வெளியாவதில் பெரும் சிக்கல் பிடித்திருக்கிறது.

வெப் தொடரில் பணியாற்றிய மேனேஜர் சங்கர் என்பவர் பணத்தைப் பெற்று ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். பெப்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் சோனா ஒரு ஆடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், நான் 25 வருடங்களாக இந்த சினிமா இண்டஸ்ட்ரியல் இருக்கின்றேன். எனக்கு எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனை தான் வருகிறது. கடந்த பத்து வருடங்களாக என்னை வேலை பார்க்கவே விடுவது கிடையாது. ஒருமுறை வாயைத் திறந்து ஒருத்தன் கையை வச்சிட்டான் என்று சொன்னதுக்கே கம்முனு உட்கார வச்சுட்டாங்க. நாம பேசினா இப்படித்தான் உட்கார வைப்பாங்க என்று தெரியும். நானும் மலையாளத்தில் படம் செய்து நாம் பாட்டுக்கு என்னுடைய வேலையை பார்த்துட்டு இருக்கேன்.

நானும் ஸ்மோக் வெப் தொடரில் பல பிரச்சனைகளை தாண்டி பிராஜெக்ட் முடித்தேன். வெப் தொடர் பாதியில் ஒரு மேனேஜரை வைத்திருந்தோம். அவர் ஏற்கனவே இரண்டு படத்துல வேலை செஞ்சதால நல்லவர் என்று நினைத்து நம்பிக்கையாய் இருப்பார் என்று வேலையை கொடுத்தோம். அவரும் நான்கு நாள் சம்பளத்தை கொடுக்காமல் என்கிட்ட இருந்து பணத்தை வாங்கி ஏமாத்திட்டு கேமராமேன் டிபார்ட்மெண்டிடம் ஹார்ட் டிஸ்க் கொடுத்துட்டு போயிட்டான். நானும் இது தொடர்பாக புகார் அளித்தேன்.

ப்ரொடியூசர் கவுன்சிலிலும் புகார் கொடுத்துட்டு பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்திட்டு வெப் தொடரை முடிச்சுட்டேன். ஆனால் ப்ரோமோஷன் பணியில் தீவிரமா இருக்கப்போ ஹார்ட் டிஸ்க் ஒன்னு இருக்கு அதை கொடுக்க மாட்டார்கள். நானும் தனி பொம்பளையா தான் போராடிக் கொண்டிருக்கிறேன். இதுக்கு மேல என்னால முடியாது நான் செத்து தான் போகணும். சாகுற வரைக்கும் விடமாட்டேன் எனக்கு நீதி வேண்டும் நியாயம் வேண்டும் என சோனா கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில் இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

20 வருஷ பகை… 5 வயது குழந்தை என்றும் பார்க்காமல் நெல்லையில் நடந்த கொடூரம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ்…

5 minutes ago

“அறிவாலயத்தில் அதிர்ச்சி.. பனையூரில் ரகசிய டீல்?”…. ஓபிஎஸ் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’…. விஜய் விரித்த ‘மெகா’ வலை…. பரபரப்பு தகவல்….!

தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து…

8 minutes ago

CSK ஜெர்சியுடன் பிரம்மாண்ட கட்-அவுட்… விண்ணதிரும் முழக்கங்கள்… இணையத்தைக் கலக்கும் தோனி ரசிகர்களின் மிரட்டலான பாலாபிஷேக வீடியோ…!

எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…

14 minutes ago

ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…. திமுக சீனியர்களுக்கு காத்திருக்கும் செக்…. அதிர்ச்சியில் அறிவாலயம்… கசிந்த ‘ரகசிய அறிக்கை’…!

திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…

15 minutes ago

“17 ஆண்டு காலத் திருமணம்… 1 லட்ச ரூபாய் கூலிப்படை”… கணவனின் பணத்திலேயே அரங்கேறிய கொடூரம்…. சடலத்துக்கு உடையை மாற்றி செய்த அசிங்கம்….!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு பெண்…

19 minutes ago

மேட்ச் நடுவே விழுந்த புறா எச்சம், ஓடி வந்த குரங்கு… உலகமே சிரித்த சம்பவத்திற்கு ஹிமந்தா கொடுத்த மாஸ் ரிப்ளை…!

டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2026 இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், சர்வதேச போட்டி ஒன்றின் போது…

23 minutes ago